தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
முனி, சக்கரக்கட்டி படங்களில் நடித்தவர் வேதிகா. பாலாவின் பரதேசி படம் இவரது திறமைக்கு மேலும் உரம் போட்டது. அதைப் பார்த்து காவியத்தலைவன் படத்தில் நாடக நடிகை வேடத்திற்கு இவரை புக் பண்ணினார் வசந்தபாலன். இரண்டறை வருடங்களாக படப்பிடிப்பு நடந்து வந்த இந்த படத்தில் வேதிகாவுக்கு சவாலான வேடமாம்.
அதனால் இந்த படத்தில் நடித்து முடிக்கிற வரை வேறு எந்த படத்திலும் கமிட்டாகாமல் தான் நடித்ததாக சொல்லும் வேதிகா, இதுவரை நான் நடித்த படங்களை விட இந்த படத்தில் எனது பெஸ்ட்டை கொடுத்திருக்கிறேன் என்கிறார். இதன்பிறகு தன்னை எந்த மாதிரியான வெயிட்டான கதாபாத்திரங்களுக்கும் இயக்குனர்கள் அணுகுவார்கள் என்றும் நம்பிக்கையுடன் சொல்கிறார்.
மேலும், வேதிகா சிறு வயதில் இருந்தே ஏ.ஆர்.ரகுமானின் தீவிரமான ரசிகையாம். அவர் இசையமைத்த ரோஜா, பம்பாய் படங்களின் பாடல்களை விருமபி ரசித்துள்ளாராம். இந்தநிலையில், இப்போது அவர் இசையமைக்கிற ஒரு படத்தில் தான் கதாநாயகியாக நடிப்பது இன்னும் சந்தோசமாக உள்ளது என்று கூறும் வேதிகா, அந்த படத்தில் சித்தார்த்துடன் இணைந்து நான் பாடும் யாருமில்லா -என்று தொடங்கும் பாடல் எனது பேவரிட் சாங்காகி விட்டது. படப்பிடிபபு தளத்தில் எப்போதும் நான் அந்த பாடலைத்தான் முணுமுணுத்துக் கொண்டிருந்தேன் என்கிறார்.