ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 55வது படத்தின் படப்பிடிப்பு சென்னையிலுள்ள ஈசிஆர் சாலையில்தான் தொடங்கப்பட்டது. அப்போது, அஜீத் படப்பிடிப்பு நடக்கிற விசயம் சென்னை ரசிகர்களுக்கு தெரிந்ததால் அந்த ஸ்பாட்டை நோக்கி படையெடுத்து வந்தனர். அதனால் பகல் நேரம் நடத்திய படப்பிடிப்பை பின்னர் இரவு நேரத்துக்கு மாற்றினார்கள்.
ஆனபோதும், அப்போதும் கணிசமான அளவு ரசிகர் கூட்டம் கூடிக்கொண்டேயிருந்ததால், பின்னர் செட் அமைத்து படமாக்கினர். அந்த அளவுக்கு அஜீத்துக்கான ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறார்கள்.
இந்த நிலையில், சென்னை சாலைகளில் தனது பைக்கில் அடிக்கடி விசிட் அடிக்கிறார் அஜீத். தான் அடையாளம் தெரியாத அளவுக்கு டிரஸ் அணிந்து கொள்ளும் அவர், முகம் சுத்தமாக வெளியில் தெரியாத அளவுக்கு ஹெல்மெட் அணிந்து கொள்கிறார். இருப்பினும், சில ரசிகர்கள் அவரை எப்படியோ அடையாளம் கண்டு கொண்டு, தங்களது பைக்கில் அவரை துரத்தத் தொடங்கி விடுகிறார்களாம்.
ஆனால் பைக் ரேஸ் வீரரான அஜீத், அவர்கள் கண்ணில் மண்ணை தூவி விட்டு சில நிமிடங்களில் அவர்களிடமிருந்து எஸ்கேப்பாகி விடுகிறார். இப்படி அடிக்கடி ரசிகர்களின் கண்ணில் சிக்கிக்கொள்ளும் அஜீத், அதற்காக தனது பைக் டிரைவிங்கை நிறுத்தவில்லை. சென்னைக்கு அருகில் படப்பிடிப்பு நடந்தால் பைக்கிலேயே சென்று வருகிறார்.
அஜீத் இப்படி பைக்கில் செல்வதைப் பார்த்துதான் ஆர்யா உள்ளிட்ட நடிகர்கள், சைக்கிளில் படப்பிடிப்பு தளங்களுக்கு சென்று வருகிறார்கள்.