தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில், பிடிச்சிருக்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் விசாகா சிங், அதன்பின் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் பிரபலமானவர், இப்போது வாலிப ராஜா, ஒரு ஊர்ல இரண்டு ராஜா படங்களில்நடித்து வருகிறார். மேலும், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் பிஸியாக இருக்கிறார். சினிமாவில் பிஸியாக இருந்தபோதிலும் பிற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க தவறுவதில்லை விசாகா. சமீபத்தில் மாநிறம் உடைய பெண்கள் நடத்தும், டார்க் இஸ் பியூட்டிபுல் என்ற அமைப்பில் தன்னையும் இணைத்துக் கொண்டு கருப்புதான் உலகிலேயே சிறந்த அழகு என, விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இப்போது, திருநங்கைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். சமீபத்தில் கோவையில், நடந்த விடியாத விடுதலை எனும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விசாகா, திருநங்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். திருநங்கைகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும், அவர்களது சாதனைகள் முடங்கி போவதாகவும், என்னைப்போன்று பிற நடிகைகளும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.