பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
நடிகை நமீதா வில்லாயக நடிக்கப்போகிறார். முதல்வர் கருணாநிதி கதை திரைக்கதை வசனத்தில் உருவாகி வரும் புதிய படம் இளைஞன். டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் பா.விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். தாய்க்காவியம் என்ற பெயரில் முதல்வர் கருணாநிதி எழுதிய நாவல்தான் இப்போது இளைஞனாக உருவாகிறது. இந்தப் படத்தில் மிகவும் பலமான ஒரு வில்லி கேரக்டர் உள்ளதாம். இந்தப் பாத்திரத்துக்கு நிறைய பேரை யோசித்துப் பார்த்த இயக்குநரும் ஹீரோவும் கடைசியில் நமீதாவை ஓகே செய்துள்ளனர். அவரை அணுகு கதை சொன்னதும், மிகவும் சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டாராம் நமீதா.
இதுகுறித்து நமீதா கூறுகையில், "இந்தப் படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கலைஞர் சார் படத்தில் நடிப்பது இன்னுமொரு பெருமை..." என்றார். அடுத்த வாரம் ஊட்டியில் நடக்கவுள்ள சூட்டிங்கில் நமீதா கலந்து கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.