சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
அரவான் படத்திற்கு பிறகு வசந்தபாலன் இயக்கி உள்ள படம் ''காவியத்தலைவன்''. சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனய்கா சோதி, நாசர், பொன்வண்ணன், தம்பி ராமைய்யா, சிங்கம் புலி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். நாடக கலைஞர்களின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டு இப்படம் உருவாகி இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், ஓய் நாட் ஸ்டுடியோஸ் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. அதில் நாடக கலைஞர்கள் சுமார் ஐந்து பேரை தயாரிப்பு குழுவினர் கவுரவித்தனர்.
நாடகத்துறையில் பல ஆண்டுகளாக சாதித்த மதுரையை சேர்ந்த கலைமணி, சத்யவான் சாவித்திரி உள்ளிட்ட பல நாடகங்களில் நடித்த ஆர்.ஆர்.ஸ்ரீராம், பவளக்கொடி, ஹரிச்சந்திரா உள்ளிட்ட நாடகங்களில் நடித்த ஆனந்தன், டிகேஎஸ். பிரதர்ஸ் நாடகத்தில் நடித்த ராஜேந்திரன் மற்றும் சிவகங்கையை சேர்ந்த தமிழரசன் உள்ளிட்ட ஐந்து நாடக கலைஞர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் படத்தயாரிப்பு சார்பில் வழங்கப்பட்டது. இதனை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஐந்து பேருக்கும் வழங்கினார்.