ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
தமிழில் இதற்கு முன் சில படங்களில் கதாநாயகியாக சமந்தா நடித்திருந்தாலும், எந்தப் படமும் அவருக்குப் பெயர் சொல்லும் அளவிற்கு இல்லாமலே போனது. அதன் பின் தெலுங்கில் தொடர்ந்து வெற்றிப் படங்களாக அமைய அங்கு முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக ஆனார் சமந்தா. ஆனால், தமிழில் மட்டும் முன்னணிக்கு வரமுடியாமல் இருந்தார். திடீரென அவருக்கு 'அஞ்சான்' படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைக்க, அடுத்து 'கத்தி' படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தமானார். இரண்டு படங்களில் 'அஞ்சான்' முதலில் வெளிவந்து சமந்தாவைப் பற்றி அதிகமாகவே பேச வைத்துவிட்டது. அது நடிப்பைப் பற்றிய பேச்சு அல்ல, அவருடைய நீச்சல் உடையைப் பற்றிய பேச்சு.
படத்தில் சமந்தா படு கிளாமராக நடித்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் மட்டுமே சுடிதாரில் வருகிறார். மற்ற காட்சிகளில் குட்டைப் பாவாடை, குட்டையான டிரவுசர் ஆகியவை மட்டுமே அணிந்து வருகிறார். இது குடும்பத்துடன் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு நெளிய வைக்கும் அளவில் இருந்தாலும், இளம் ரசிகர்கள் திரையரங்குகளில் நிறையவே கமெண்ட் அடித்து வருகிறார்கள். அதிலும் ஒரு பாடல் காட்சியில் சமந்தா சில வினாடிகள் நீச்சல் உடையில் வரும் போது விசில் சத்தம் அதிகமாக ஒலிக்கிறதாம். அந்தக் குறிப்பிட்ட காட்சியின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகப் பரவி வருகிறது. அது பற்றிய கமெண்ட்டுகளும் அதிகம் எழுந்து வருகிறதாம்.
தமிழ்த் திரையுலகில் முன்னணியில் வருவதற்கு சமந்தா நீச்சல் உடையிலும் நடித்தது மற்ற நடிகைகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாம். பலர் காதில் புகை வருவதாகக் கேள்வி...