'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சிறுத்தை சிவா அஜீத்தை வைத்து இயக்கிய படம் வீரம். ஏற்கனவே ரஜினி நடித்த முரட்டுக்காளை படத்தின் சாயலில் ஒரு அண்ணன் 4 தம்பிகள் கதையில் இப்படம் உருவானது. முரட்டுகாளையில் ரதி நடித்திருந்த வேடத்தில் வீரம் படத்தில் தமன்னா நடித்திருந்தார். சின்னச்சின்ன திருத்தங்களை செய்து அந்த படத்தை புதிய கதை போன்று இன்றைய சாயலில் கொடுத்திருந்தார் சிவா.
அதையடுத்து, இப்போது ஒரு தெலுங்கு படத்தை இயக்கி வரும் அவர், இப்போது கெளதம்மேனன் இயக்கத்தில் நடித்து வரும் அஜீத்தைக்கொண்டு மீண்டும் ஒரு படத்தை இயக்கப்போகிறாராம். அதற்கான கதை விவாதங்கள் தற்போது நடந்து கொண்டிருக்கிறதாம்.
அந்த படம் பற்றி சிறுத்தை சிவா கூறுகையில், வீரம் படத்திற்கு அஜீத் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். முக்கியமாக பைக், கார் என்று ஓட்டிய அவரை மாட்டு வண்டி ஓட்ட வைத்தேன். அவரும் எந்தவித தயக்கமும் காட்டாமல் ப்ரபசனல் மாட்டு வண்டி ஓட்டுனர் போலவே நடித்தார். அதனால் அடுத்து அவரை வைத்து இன்னொரு புதுமையான கதையை படமாக்கப்போகிறேன். அவரது 55வது படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அந்த படத்தின் வேலைகள் தொடங்கும்.
மேலும், இதுவரை எத்தனையோ வித்தியாசமான கதைகள் வந்திருந்தாலும், அஜீத்தை வைத்து அடுத்து நான் இயக்கப்போகிற படம். இதுவரை தமிழ் சினிமா கண்டிராத புதுமையான கதையாக இருக்கும் என்கிறார் சிவா.