600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
சினிமாவில் பிசியாக இருந்த காலகட்டத்தில் தான் இசையமைத்த படங்களின் ஆடியோ விழாக்களுக்கு பெரும்பாலும் வரமாட்டார் இளையராஜா. ஆனால் இன்றைக்கு நிலைமை தலைகீழாகி விட்டது. அவ்வப்போது ஒரு படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா, அது சின்ன படமாக இருந்தாலும அதன் ஆடியோ விழாவில் அவசியம் கலந்து கொள்கிறார். அதோடு, தான் கடந்து வந்த காலகட்டங்களில் நடைபெற்ற சுவாரஸ்யமான விசயங்களையும் மேடையில் பேசி கைதட்டல் வாங்கிக்கொள்கிறார்.
இந்நிலையில, சமீபத்தில் திருவண்ணாமலையில் நடைபெற்ற ஒரு ஆன்மீக இலக்கிய விழாவில் இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். எப்போது அந்த கோயிலுக்கு சென்றாலும் மலையைச்சுற்றி வணங்கி தரிசனம் செய்யும் வழக்கம் கொண்ட இளையராஜா இந்த முறையும் மலையை சுற்றினாராம்.
ஆனால், சிவனே ஆனந்த சயனத்தில் வீற்றிருப்பது போன்று அமைந்திருக்கும் அந்த மலையில் ஒவ்வொரு பெளர்ணமியின் போதும் பக்தர்கள் அந்த மலையைச்சுற்றித்தான் வணங்குவார்கள். ஆனால் அந்த மலையில் இப்போது வீடுகள் முளைத்திருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்து விட்டாராம் இளையராஜா.
இதையடுத்து நடந்த ஆன்மீக சொற்பொழிவில் பேசியபோது, சிவன் மீது நம்பிக்கை கொண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு தரிசனம் செய்ய வருகிறார்கள். தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற இந்த மலையைத்தான் சுற்றுகிறார்கள். ஆனால் இப்போது இந்த மலையில் வீடுகள் கட்டியிருக்கிறார்கள். அப்படியென்றால் சிவனை சுற்றி வருபவர்கள் இவர்களையும் சேர்த்து சுற்ற வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினாராம்.
விளைவு, இதுவரை இந்த விவகாரத்தில் கண்டுகொள்ளாமல் இருந்த திருவண்ணாமலை பக்தர்கள், சிவன் மலையில் கட்டியிருக்கும் வீடுகளை நகராட்சி அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் குதிக்க தயாராகி விட்டார்களாம்.