இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
புராண தொடர்களை ஒளிபரப்புவதற்கு தொலைக்காட்சிகள் அதிக ஆர்வம் காட்டுகிறது. காரணம் மக்கள் அதற்கு அளித்து வரும் அமோக ஆதரவு. மகாபாரத தொடரை இரண்டு தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி வருகிறது. நாயன்மார்கள் வரலாற்றை ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது. அந்த வரிசையில் இப்போது கேப்டன் டி.வியும் இணைந்திருக்கிறது.
ஷீரடி ஜெய் சாய்பாபா என்ற பக்தி வரலாற்று நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. பல்வேறு துன்பங்களில் கிடந்து தவிக்கும் மக்களை பகவான் சாய்பாபாவின் அருள் எப்படி அதிலிருந்து மீட்கிறது என்கிற கதைகளோடு சாய்பாபாவின் வரலாற்று கதையும் இணைத்து சொல்லப்படுகிறது. அதனுடன் பாபா சொன்ன ஹரி கதைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது
சாய்பாபாவாக ஸ்ரீநிவாச ரெட்டி நடிக்கிறார். மனோரமா, சுபலேகா சுதாகர், சுமன், சத்யப்பரியா, விஜய் பாபு ஆகியோரும் நடிக்கிறார்கள். திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.