ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சூப்பர் ஸ்டார் ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கும் பிரமாண்ட படமான லிங்காவை கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். கோச்சடையான் படம் ரிலீசாவதற்கு முன்பே லிங்கா படப்பிடிப்புகள் கடந்த மே மாதம் முதல் தேதியே தொடங்கிவிட்டது. மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் தொடங்கிய படப்பிடிப்பு அதன் பிறகு மாண்டியா மாவட்டத்தின் சில பகுதிகளிலும், ஐதராபாத் மற்றும் சென்னையிலும் நடந்தது.
சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது லிங்காவின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் கர்நாடக மாநிலம் சிமோகா பகுதியில் நடந்து வருகிறது. இந்த பகுதிகளில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. இதில் ரஜினி 21 நாட்கள் நடிக்கிறார். மற்ற நாட்களில் அவர் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. இதற்காக ரஜினி கடந்த சில தினங்களுக்கு முன்பு சிமோகா வந்து சேர்ந்தார். சிமோகா அருகில் உள்ள ஜோக் அருவியில் (கும்கி படத்தில் எடுக்கப்பட்டது), ரஜினி சோனாக்ஷி சின்ஹா நடித்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
அருவியிலிருந்து சிறிது தொலைவில் பிரமாண்ட அணை செட்டும், அதற்கு அருகில் 40 அடி உயர சிவன் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தொடர்ந்து படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. கடைசி நாளில் அணையை வெடிகுண்டு வைத்து தகர்த்து ஊருக்குள் வெள்ளம் பாய்ந்து வருவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. இதற்காக ஹாலிவுட்டிலிருந்து தொழில்நுட்ப கலைஞர்கள் வர இருக்கிறார்கள்.
சிமோகா படப்பிடிப்பில் தினமும் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டு நடித்து வருகிறார்கள். சமையல் கலைஞர்கள் மட்டும் 100 பேர் பணியாற்றுகிறார்கள். ஒரு நாளைக்கு 25 முதல் 50 லட்சம் வரை படப்பிடிப்புக்கு செலவாகிறதாம். படப்பிடிப்பு நடைபெறுவதை கேள்விப்பட்டு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வேடிக்கை பார்க்க வருகிறார்கள். ஆனால் அவர்கள் படப்பிடிப்பு நடக்கும் இடத்திலிருந்து ஆயிரம் அடிக்கு அப்பாலேயே தடுத்து நிறுத்தப்பட்டு விடுகிறார்கள். ஜோக் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி குமார் தலைமையில் தினமும் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 50க்கும் மேற்பட்ட தனியார் பாதுகாப்பு குழுக்களையும் தயாரிப்பாளர் ஏற்பாடு செய்திருக்கிறார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நல்லபடியாக முடிய வேண்டும் என்று ரஜினி தீர்த்தஹள்ளி ஸ்ரீராமேஷ்வரா கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகளை செய்தார்.