பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
ரட்சகன்,ஸ்டார் படங்களை இயக்கிய பிரவீன் காந்தி நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி உள்ள படம் புலிப்பார்வை. இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ், சென்னை சத்யம் தியேட்டரில் இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவிற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கியதுடன், படத்தின் ஆடியோவையும் வெளியிட்டார்.
ஆடியோவை வெளியிட்டு பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், புலிப்பார்வை ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இருப்பினும்,மிகுந்த கனத்த இதயத்துடன் இங்கு நிற்கிறேன். 1980களில் இலங்கையில் யுத்தம் துவங்கிய காலம். அப்போது அங்கு வாழ்ந்த தமிழர்கள் தங்களின் சொந்தங்கள், உரிமைகளை இழந்து நின்றனர். அப்போது என்னால் முடிந்த பணம் மற்றும் பொருள் உதவியைச் செய்தேன். இதை இப்போதும் என்னால் மற்ற முடியவில்லை. 1991, 2009ல் நடந்த போர் இப்போதும் என் நினைவில் நிற்கிறது. எல்லா பழைய நினைவுகளும் திரும்பி வருகிறது.
இரண்டு விஷயங்கள் இப்போது நடந்திருக்க கூடாதா என எனக்கு தோன்றுகிறது. ஒன்று, இப்போது நாட்டின் பிரதமராக பதவியேற்று செங்கோட்டையில் கொடியேற்றி உள்ள மோடி, 2008லேயே இந்தியாவின் பிரதமராகி இருக்க கூடாதா? அப்போது மோடி பிரதமராகி இருந்தால் இலங்கை அழிய விட்டிருக்க மாட்டார். நிச்சயம் தடுத்திருப்பார். மற்றொன்று, 6 மாதங்களுக்கு (பச்சைமுத்து தேர்தலில் நிற்பதற்கு முன்)முன் இந்த படம் வெளி வந்திருக்கக் கூடாதா? அப்படி வந்திருந்தால் இலங்கையில் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகள், உரிமைகளை இழந்திருக்க மாட்டார்கள்.
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்யும். இன்று பதவியேற்றுள்ள மத்திய அரசிற்கு எதை, எப்படி செய்ய வேண்டும் என்று நன்றாக தெரியும். நான் பதவியேற்று இரண்டரை மாதங்களில் இலங்கை தமிழர் பிரச்னை, தமிழக மீனவர் பிரச்னை ஆகியவற்றை தீர்ப்பதற்காக பல கூட்டங்கள் இன்று வரை நடத்தப்பட்டுள்ளன. இதை ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. முந்தைய அரசு இது போன்ற கூட்டங்களை நடத்தவில்லை. மீனவர் உரிமைகளை மீட்க பாடுபடுவது எங்களின் கடமை.
இலங்கை தமிழர், மீனவர் பிரச்னை போன்ற அரசியல் சார்ந்த விஷயங்களை பேசுவதற்கான மேடை இது இல்லை. இருப்பினும் அரசின் முயற்சிகளை சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன்.
இப்படத்தை தயாரித்திருக்கும் பச்சைமுத்து பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். தற்போது சினிமா தயாரிப்பிலும் இறங்கி உள்ளார். இது போன்ற பிரச்னைகளை கையில் எடுத்து படமாக்க அவருக்கு எப்படி தோன்றியது என தெரியவில்லை. ஒரு தமிழர், தமிழ் மக்களுக்காக எடுத்துள்ள படம். இது வெற்றி அடைய வேண்டும். நான் இறை நம்பிக்கை உள்ளவன். இந்த படம் நன்றாக ஓட வேண்டும். இந்த படத்திற்கும், படக்குழுவினருக்கும் நல்ல பெயர் கிடைக்க வேண்டும். தமிழர் வெற்றி பெற வேண்டும். உலக அளவில் இந்த படம் பேசப்பட வேண்டும். இந்த விழாவில் கலந்து கொண்டது எனக்கு மிகப் பெரிய சந்தோஷத்தை தந்துள்ளது. படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.