புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
இலங்கைக்கு தமிழ் சினிமாவைச் சேர்ந்த யாரும் செல்லக்கூடாது என்றொரு கட்டுப்பாடு இருந்து வருகிறது. இதன்காரணமாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் அண்டை மாநில மொழி நடிகைகளும்கூட இலங்கைக்கு செல்ல பயந்து கொண்டிருக்கிறார்கள். அதோடு, இலங்கை அரசின் செயல்பாடுகள் குறித்து தமிழ்த்திரையுலகம் சார்பில் அவ்வப்போது கண்டனக் கூட்டங்களும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடவுள் பாதி மிருகம் பாதி படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவின்போது, இலங்கைக்கு படப்பிடிப்பு நடத்த வாருங்கள். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நான் செய்கிறேன் என்று ஓப்பனாக பேசினார் பூஜா. அதோடு நில்லாமல், தனக்கு சான்சு கொடுத்த பாலா உள்ளிட்ட சில இயக்குனர்களையும் இலங்கைக்கு படப்பிடிப்பு நடத்த வருமாறு அன்பு வேண்டுகோள் விடுத்து வருகிறாராம்.
கோடம்பாக்கமே இலங்கைக்கு எதிர்ப்பு குரல் கொடுத்து வரும் நிலையில், இலங்கையைச் சேர்ந்த ஒரு சிங்கள நடிகை, தமிழகத்தின் தலைநகரில் நின்று கொண்டு இயக்குனர்களை அழைக்கிற இந்த விவகாரம், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் தலைவர்களின் காதில் விழுந்தும் காது கேட்காதவர்களைப் போன்று இருக்கிறார்களாம்.
மாறாக, அது பச்சக்குழந்தை அதுக்கு என்ன தெரியும் என்று வேறு நடிகைக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.