தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல இந்தி நடிகர் அபிஷேக் பச்சன் தமிழ் படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். வாய்ப்பு தாருங்கள் என்று கேட்கிறார். அண்மையில் சென்னை வந்திருந்த அவர் இதுபற்றி கூறியதாவது: சென்னைக்கும், எங்கள் குடும்பத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அப்பாவின் நண்பர் ரஜினி, கமல் இங்கே இருக்கிறார்கள். என் மனைவி ஐஸ்வர்யா சினிமா வாழ்க்கையை இங்கிருந்துதான் தொடங்கினார். நான் ரன் ரீ-மேக்கில் நடித்திருக்கிறேன். ரேவதி இயக்கதில் நடித்திருக்கிறேன். மணிரத்தினத்தின் மூன்று படங்களில் நடித்திருக்கிறேன். அதன் படப்பிடிப்புகள் இங்கேதான் நடந்தது. விக்ரமின் தீவிர ரசிகன், அவரது தூள் படத்தை 17 முறை பார்த்துவிட்டு அதை இந்தியில் நடித்தேன். அஜீத், மாதவன், விஜய் என எனக்கு பிடித்த நடிகர்கள் இங்கே இருக்கிறார்கள். இப்படி பல தொடர்புகள் உண்டு.
தமிழ் படத்தில் நடிக்க எப்போதுமே ஆர்வம் உண்டு. மணி சார் ஒரு முறை அழைத்தார் அப்போது என்னால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. அதை இப்போது நினைத்தாலும் வருத்தமாக இருக்கிறது. இன்னொரு வாய்ப்பு கொடுங்கள் என்று அவரிடம் கேட்டிருக்கிறேன். முதலில் நன்றாக தமிழ் பேச கற்றுக்கொள் என்று சொல்லியிருக்கிறார். அதைச் செய்து வருகிறேன். தமிழில் லிங்குசாமி, பாலா, ஏ.ஆர்.முருகதாஸ் பிடித்த இயக்குனர்கள். வாய்ப்பு தாருங்கள் தமிழில் நடிக்க தயாராக இருக்கிறேன் என்கிறார் அபிஷேக்.