இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஆஸ்கர் பிலிம்ஸ் இதுவரை தயாரித்துள்ள படங்களில் அதிக பட்ஜெட்டில் அதாவது 150 கோடியில் தயாராகியுள்ள படம் ஐ. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்-எமி ஜாக்சன் நடித்துள்ள இந்த படம் 2012ல் தொடங்கப்பட்டது. ஆனால் இன்னும் இறுதிகட்ட பணிகள் முடியவில்லை என்கிறார்கள்.
அதோடு, இந்த படத்தை தமிழ், தெலுங்கு. இந்தி என மூன்று மொழிகளில் எடுத்துள்ள ஷங்கர், இன்னும் சில மொழிகளிலும் டப் செய்து வெளியிடுகிறாராம். அதில் சீன மொழியும் ஒன்றாம். அந்த வகையில், ஜப்பான் மொழியில் ரஜினி நடித்த படங்கள் டப் செய்யப்பட்டு வெளியாகி வரும் நிலையில், சீன மொழியில் டப் செய்யப்படும் முதல் படமாக ஐ இடம்பெறுகிறது.
இந்த படத்தில் தான் நடித்தது பற்றி விக்ரம் கூறுகையில், ஷங்கர் சார் படம் என்றாலே எனக்கு ஸ்பெசல்தான். அந்த வகையில் அந்நியன் படத்தை நான் மறக்க முடியாது. அதில் மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்திருந்தேன். ஒவ்வொரு கெட்டப்புக்கேற்பவும் பாடி லாங்குவேஜை மாற்றி நடித்தேன். ஆனால் இந்த ஐ படத்தில் அதைவிட கடுமையாக உழைத்திருக்கிறேன்.
முக்கியமாக, 60 கிலோ எடையில் நடித்த நான் திடீரென்று 125 கிலோவுக்கு மாறினேன். அதையடுத்து, 90 கிலோவுக்கு மாறினேன். இப்படி கேரக்டரின் தன்மைக்கேற்ற எனது உடல்மொழியையும் மாற்றிக்கொண்டே வந்தேன். அந்த வகையில் ஐ படத்துக்காக 2 வருடங்களாக நான் தவம் இருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அந்த கடின உழைப்புக்கேற்ற பலனை ஷங்கர் சார் அவுட்புட்டில் காண்பித்து விடுவார் என்பதால் பெரிய சந்தோசமும் உள்ளது என்கிறார் விக்ரம்.