'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இளையராஜா இசையமைப்பில், கார்த்திக் ரிஷி இயக்கத்தில் அஷ்வின், சிருஷ்டி மற்றும் பலர் நடித்துள்ள 'மேகா' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இளையராஜா கலந்து கொண்டு பேசும் போது, என்னைவிட பொறுமைசாலி யாருமில்லை, என்றார். அவர் அப்படி சொல்ல ஒரு காரணம் இருக்கிறது. அந்த சுவையான விஷயத்தை அவர் சொல்லிய போது,
“எவ்வளவோ மோசமான படங்களுக்குலாம் நான் மியூசிக் பண்ணியிருக்கிறேன். நீங்க ஒரு தடவைப் பார்த்து 'தூ..'ன்னு துப்புன படங்களையெல்லாம் நான் நாலு தடவைப் பார்த்து மியூசிக் பண்ணியிருக்கிறேன். முதல்ல படத்தோட ரீலைப் போட்டுப் பார்ப்போம். அப்புறம் அதே ரீலைப் பார்த்து மியூசிக் கம்போஸ் பண்ணணும். ஆர்க்கெஸ்ட்ராவோட மியூசிக் கம்போஸ் பண்ணி, ரிகர்சல் பண்ணி, கண்டக்டர் கிட்ட சொல்லி பார்க்கணும். அப்புறம் டேக், அதுல ஏதாவது தப்பு ஆச்சின்னா திரும்ப ஒரு டேக்...இப்படி டேக் மேல டேக் போனால் அந்தப் படத்தை நான் எத்தனை முறை பார்க்கணும். நீங்க ஒரு தடவைப் பார்த்து திட்டற படத்தை நான் எத்தனை முறை பார்க்கணும். அப்ப நான் எவ்வளவு பெரிய பொறுமைசாலி..” என்றார்.
“அப்படித்தான் பாரதிராஜாவோட 'முதல் மரியாதை' படத்தை முதலில் பார்த்ததும் எனக்குப் பிடிக்கலை. அதை அவர்கிட்டயே நேரடியா சொல்லிட்டேன். படத்துல கிளைமாக்ஸ் காட்சி..அதுக்கு இசையமைச்சிட்டு பாராதிராஜாவைக் கூப்பிட்டுக் காட்டினேன். அவரு அப்படியே கையை பிடிச்சிக்கிட்டு கண்ணீரோட “உனக்குப் பிடிக்காமலயே இவ்வளவு அருமையா இசையமைச்சிருக்கியேன்னு” உணர்ச்சிவசப்பட்டு பேசினாரு. இந்த விஷயத்தை யாரும் இதுவரைக்கும் வெளிய சொல்லலை. இன்டஸ்ட்ரில இருக்கிறவங்களுக்குத் தெரியும். இசைங்கறது எனக்கு சரஸ்வதி மாதிரி. எனக்குப் படம் பிடிக்கலையா, பிடிக்கலை. ஆனால் என் தொழிலுக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன். இந்த 'மேகா' படத்துல இயக்குனர் கார்த்திக் ரிஷி அருமையா திரைக்கதை அமைச்சி படத்தை அருமையா எடுத்திருக்காரு. முதல் படத்தையே இவ்வளவு அருமையா பண்ணிட்டியே, அப்புறம் என்னய்யா பண்ணப் போறேன்னு கேட்டேன். அதுதான் இந்தப் படத்திற்கு ஆசீர்வாதம்,” என்றார் இளையராஜா.