டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபலமான ஹீரோக்கள் தாங்கள் நடிக்கும் படத்தில் ஒரு பாடல் பாடுவது இப்போது பேஷன். புதுமுக ஹீரோக்களும் பாட ஆரம்பித்திருக்கிறார்கள். கபடம் என்ற படத்தில் நடிக்கும் ஹீரோ சச்சின் அந்தப் படத்தில் 5 பாடல்களை பாடியுள்ளார்.
இதுபற்றி படத்தின் இயக்குனர் ஜோதி முருகன் கூறியதாவது: நான் ராதாமோகன், செல்வராகன், சிம்புதேவன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி விட்டு இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறேன். சோழா பொன்னுரங்கம் தயாரிக்கிறார். கடந்த ஒரு வருடமாக படத்தை வெளியிட போராடி வருகிறோம். இப்போது வருகிற 22ந் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்.
உலகத்தில் பிறந்த எல்லா மனிதனிடமும் கபடம் இருக்கிறது. இல்லை என்று சொன்னால் அவர் பொய் சொல்கிறார் என்று அர்த்தம். திருமணம் நிச்சயக்கப்பட்ட ஒரு ஆணும் பெண்ணும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க நினைக்கிறாங்க. அவுங்க பழகும்போது திடீர்னு ஒரு கொலை நடந்து போகுது. ஒருத்தர் மேல ஒருத்தருக்கு சந்தேகம் வருது. இதுல கபட நாடகம் ஆடுறது யாருங்றதுதான் கதை. ஹீரோ சச்சின் அடிப்படையில் ஒரு கீ போர்ட் பிளேயர் அதனால் படத்தில் வரும் ஆண் பாடும் 5 பாடல்களையும் அவரே பாடியிருக்கிறார். ஹீரோயினாக அங்கனாராய் நடிக்கிறார். வன்முறை காட்சியோ, ஆபாச காட்சியோ படத்தில் இல்லை. இருந்தாலும் கதை காண்டவர்சியாக இருப்பதாக சொல்லி படத்துக்க தணிக்கை குழு ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறது என்கிறார் இயக்குனர் ஜோதி முருகன்.