தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பார்த்திபன் இயக்கி உள்ள கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படம் வருகிற 15ந் தேதி அன்று வெளிவருகிறது. இதில் புதுமுகங்களுடன் ஆர்யா, அமலாபால், விஷால், சிம்பு, டாப்ஸி ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். கதையே இல்லாமல் புதுமையான அம்சத்துடன் இந்த படம் ரிலீசாகிறது. புதிய படங்களுக்கு திருட்டு விசிடி தயாரித்து வெளியிடுபவர்களை எச்சரித்து பார்த்திபன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சக மனிதர்களின் உழைப்பையும், உணர்வையும் மதித்து படங்களை திரையரங்கு வந்து ரசிக்கும் ரசிகர்களை தலைவணங்குகிறேன்.
"அயல்நாட்டு படங்களின் கதையைத் திருடி எடுக்கிற தமிழ் படங்களை நாங்கள் ஏன் திருட்டு டிவிடியாக விற்பனை செய்யக்கூடாது" என்று குற்றம் சாட்டும் குணசித்திரங்களே... தயவு செய்து என் படத்தை முதல் காட்சியிலேயே பார்த்து விடுங்கள், உங்கள் குற்றப்பத்திரிகையில் என் படைப்பு பதிவாகவில்லையெனில் திருட்டு விசிடி, டிவிடி, கேபிள் மற்றும் இண்டர்நெட் மூலமாக இந்த ஒரிஜினல் திரைப்படத்தை திருடி எங்களின் உயிரையும், உழைப்பையும் உறிஞ்சாதீர்கள். மீறினால் தண்டிக்கப்படுவீர்கள், அதிலிருந்து தப்பித்தால் மரண அடி விழும்... விதி வசத்தால்.
இவ்வாறு அந்த அறிக்கையில் பார்த்திபன் கூறியுள்ளார்.