வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
இயக்குனர் பிரிதர்ஷன் கேரள அரசின் ஸ்தலசித்திர அகாடமியில் (திரைப்பட கழகம்) கடந்த 3 வருடங்களாக தலைவராக இருந்து வந்தார். மலையாள சினிமாவின் வளர்ச்சி மற்றும் பிரச்சினைகளை கவனித்துக் கொள்ளும் சுயாட்சி அமைப்பு இது. இதில் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். பிரியதர்ஷனின் பதவிகாலம் இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையிலும், அடுத்தும் அவர்தான் தலைவர் என்ற பேச்சு உள்ள நிலையிலும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
"எனது சொந்த காரணங்களுக்காகவும், திரைப்பட பணிகள் அதிகம் இருப்பதாலும் ராஜினாமா செய்வதாக" திரைப்படத்துறை அமைச்சர் திருவச்சூர் ராதாகிருஷ்ணனுக்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில் பிரியதர்ஷன் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் அகாடமிக்குள் நடக்கும் குரூப் பாலிட்டிக்ஸ் பிடிக்காமலும், பிரியதர்ஷன் எடுத்த சில அதிரடி நடவடிக்கைளால் பாதிக்கப்பட்டவர்கள் அவர் மன்னிப்பு கேட்ட வேண்டும் என்று குரல் கொடுத்ததாலும்தான் பிரியதர்ஷன் ராஜினாமா செய்திருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.