ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வாரிசு நடிகர்களில் பலர் முன்னணி ஹீரோக்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த ரேசில் மிகவும் பின் தங்கி இருப்பவர் ஷக்தி. பி.வாசுவின் மகன் என்ற விசிட்டிங் கார்டை வைத்துக் கொண்டு அவரது அப்பா இயக்கிய 'தொட்டால் பூ மலரும்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் ஷக்தி. இந்த படத்தை தொடர்ந்து, 'மகேஷ் சரண்யா மற்றும் பலர்', 'ஆட்டநாயகன்', நினைத்தாலே இனிக்கும்' உட்பட பல படங்களில் நடித்தார். இப்படங்கள் வெற்றியடைந்திருந்தால் முன்னணி வரிசையில் இடம் பிடித்திருப்பார். அவரது கெட்ட நேரமோ என்னவோ மேற்கண்ட அனைத்துப் படங்களுமே தோல்வியடைந்தன. எனவே சரிவை சந்திக்கும் நிலைக்குத்தள்ளப்பட்டார் ஷக்தி.
இயக்குநர் பி.வாசுவின் மகன் என்பது ஷக்திக்கு ஆரம்பத்தில் ப்ளஸ்ஸாக இருந்தது. அதுவே போகப்போக அவருக்கு மைனஸாகவும் ஆகிவிட்டது. ஷக்தியை ஹீரோவாக வைத்து படம் இயக்க ஆசைப்பட்ட புதுமுக இயக்குநர்கள், ஷக்தியை அப்ரோச் பண்ணாமலே பின்வாங்கிவிட்டனர். காரணம்...பி.வாசு சீனியர் இயக்குநர் என்பதால் அவரிடம் கதை சொல்லி ஓகே பண்ணுவது கஷ்டம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டதுதான். இது எல்லாமுமாக சேர்ந்து ஷக்தியின் மார்க்கெட்டை காலி பண்ணிவிட்டது.
தற்போது 'படம் பேசும்' உட்பட ஒரு சில தமிழ்ப்படங்களில் மட்டும் நடித்து வரும் ஷக்தி, தற்போது மலையாளத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக அறிமுகமாகவிருக்கிறார். அனில் கே.நாயர் இயக்கவிருக்கும் 'ரோசாப்பூ காலம்' என்று படத்தில்தான் ஷக்தி ஹீரோவாக நடிக்கிறார்! கதாநாயகி தேர்வு நடந்து வரும் இப்படத்தின் படப்பிப்பு அக்டோபர் மாதம் கேரளாவில் துவங்கவிருக்கிறது. தன்னுடைய தாய்மொழியான மலையாளத்தில் நடிப்பதை எண்ணி சந்தோஷத்தில் இருக்கிறார் ஷக்தி.