Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

எந்த நடிகையுடனும் காதல் இல்லை! - வினய் பேட்டி

09 ஆக, 2014 - 09:46 IST
எழுத்தின் அளவு:

நடிகைகளுடன் ஸ்பாட்டில் ஜாலியாக அரட்டை அடிப்பதோடு சரி. அதன்பிறகு காதல் கத்தரிக்காய் என்று அவர்களை சுற்றிக்கொண்டு திரியும பழக்கம் எனக்கு இல்லை. அப்படிப்பட்ட நான் யாரோ நடிகையை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்யவிருப்பதாகவும் செய்தி பரவியிருப்பது வேடிக்கையாக உள்ளது என்கிறார் வினய்.

தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...


* தற்போது என்னென்ன படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள்?


அரண்மனை, இருவர் உள்ளம், சேர்ந்து போலாமா, ஆயிரத்தில் இருவர் என நான்கு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இதில், அரண்மனை படம் விரைவில் வெளிவரும். இந்த படங்களில் இருவர் உள்ளம் மட்டும் ஏதோ பிரச்சினையால் படப்பிடிப்பு முழுமை அடையாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்ற படங்கள் எல்லாமே அடுத்தடுத்து திரைக்கு வந்து விடும்.


* ஆயிரத்தில் இருவர் படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறீர்களாமே?


காதல் மன்னன், அமர்க்களம் படங்களை இயக்கிய சரண் இயக்கும் அந்த படத்தில் நான் கிராமம், நகரம் என இரண்டுவிதமான கெட்டப்புகளில் நடிக்கிறேன். ஆனால் ஒன்றுக்கொன்று எந்தவித தொடர்போ, சாயலோ இருக்காது. திருநெல்வேலி மண்வாசனைக் கதையில் உருவாகும் அந்த படத்தில் திருநெல்வேலிகாரனாக வேஷ்டி கட்டிக்கொண்டு நடித்திருக்கிறேன். இந்த படத்திற்கு பிறகு தமிழில் எனக்கு ஒரு நிரந்தரமான இடம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.


* மாடர்ன் லுக்கில் இருக்கும் உங்களுக்கு வில்லேஜ் கெட்டப் பொருந்துமா?


உண்மைதான். என்னை வில்லேஜ் கதையில் நடிக்க வைக்கவே யாரும் இதுவரை முன்வந்ததில்லை அப்படியே வந்தாலும், நான் சிட்டி லுக்கில்தான் நடித்தேன். ஆனால், முதன்முறையாக சரண் சார்தான் என்னை தைரியமாக திருநெல்வேலிக்காரனாக மாற்றியிருக்கிறார். நானும் அந்த ஊர்வாசிகளைப் போன்றே என்னை முழுசாக மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறேன். இந்த படத்திற்கு பிறகு என்னை கிராமியப்பட டைரக்டர்கள் நடிக்க அழைப்பார்கள்.


மேலும், மோதி விளையாடு படத்திலேயே என்னை நடிக்க வைத்த சரண் சார், இந்த படத்தில் ஒரு உலகளாவிய பிரச்சினையை மையமாகக்கொண்ட கதையில் என்னை நடிக்க வைத்திருக்கிறார். அதனால் இதுவரை நான் தமிழில் நடித்த கதாபாத்திரங்களில் இந்த படத்தில் நான் நடித்துள்ள வேடம் என்னை கண்டிப்பாக பேச வைக்கும்.


* படப்பிடிப்புகளில் நடிகைகளுடன் நீங்கள் அதிகமாக கடலை போடுவதாக கூறப்படுகிறதே?


நான் ஒரு இளைஞன். அதுவும் எப்போதுமே கலகலப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன். அதனால் படப்பிடிப்பு தளங்களில் என்னுடன் நடிக்கும் நடிகர்-நடிகைகள் யாராக இருந்தாலும் அவர்களுடன் ஜாலியாக கடலை போட்டுக்கொண்டுதான் இருப்பேன். அது என் சுபாவம், அதை யாராலும் மாற்ற முடியாது.


ஆனால், அப்படி நான் கடலை போடும் அத்தனை நடிகைகளும் எனது நிஜமான நண்பிகள். அவர்களுடன் எனக்கு காதல் கத்தரிக்காய் என்று எதுவும் கிடையாது.


* ஆனால் நீங்கள் யாரையோ காதலிப்பதாகவும், அவரையே விரைவில் திருமணம் செய்வதாகவும் செய்தி பரவியுள்ளதே?


அது தவறான செய்தியே. காரணம், எனக்கு நிஜத்தில் யாரும் காதலி இல்லை. படத்துக்குப்படம் நடிகைகளை காதலிப்பது போல் நடிப்பதோடு சரி. நிஜத்தில் யாருடனும் காதல் வரவில்லை. அப்படி வந்திருந்தால் அந்த பெண்ணையே நான் திருமணம் செய்து கொண்டிருப்பேன். மேலும், இப்போது நான் கல்யாண வயதை அடைந்து விட்டதால் எனது பெற்றோர் எனக்கு திருமணம் செய்ய முடிவு செய்து விட்டனர். அதற்காக பல மாதங்களாக தீவிரமாக பெண் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் எந்த பெண்ணும் செட்டாகவில்லை.


அதனால் எனக்கு சீக்கிரம் பெண் அமைய வேண்டுமென்று எனது அம்மா கோயில் கோயிலாக என்னை கூட்டிக்கொண்டு செல்கிறார். ஆக, எனக்கேற்ற பெண் கிடைத்ததும், சீக்கிரமே நான் திருமணம் செய்து கொள்வேன்.


* வினய் தான் நடிக்கும் படங்களின் ப்ரமோஷன்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்றொரு குற்றச்சாட்டு உள்ளதே?


அது முற்றிலும் தவறானது. சில சமயங்களில் நான் நடித்த படங்களின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் என்னால் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அதை நான் வேண்டுமென்றே செய்யவில்லை சில படங்களுக்காக அமெரிககா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நான் படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென்று அழைத்தார்கள். அப்போது என்னால் வர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.


மற்றபடி, நான் ஓய்வாக இருந்தபோது எந்த படத்தின் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மறுத்ததே இல்லை. என்னை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் நான் நல்ல பிள்ளையாகவே இதுவரை இருந்து வந்திருக்கிறேன். இனியும இருப்பேன். அவர்கள் எடுக்கிற படங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது எனது கடமை. அதை நான் மறுக்கவில்லை. இருப்பினும் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் சில சமயங்களில் அதில் கலந்து கொள்ள முடியாமல் செய்து விடுகின்றன. ஆனால், இனிமேல் அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வேன்.


* அரண்மனை படத்தில் ஹன்சிகாவுடன் நடித்த அனுபவம் பற்றி!


அவரும் என்னைப்போலவே ஜாலியான பெண்தான். தான் முன்னணி ஹீரோயினி என்றபோதும் எந்தவித பந்தாவும் இல்லாமல் பழகக்கூடியவர். ஆனால் அந்த படத்தில் அவர் எனக்கு ஜோடி இல்லை. எனக்கு ஜோடியாக நடிப்பவர் ஆண்ட்ரியா. அப்படமும் கிட்டத்தட்ட வில்லேஜ் கதைதான். நகரத்தில் படித்துக்கொண்டிருக்கும் நான் வில்லேஜ்க்கு செல்கிறேன். அப்போது அங்கு சந்திக்கும் பிரச்சினைகள்தான் கதை. த்ரில்லர் ப்ளஸ் காமெடி கலந்த அந்த படம் எனது ஹிட் பட வரிசையில் கட்டாயம் இடம் பிடிக்கும்.


* உன்னாலே உன்னாலே, ஜெயங்கொண்டான் படங்களுக்குப் பிறகு நீங்கள் நடித்த எந்த படமும் ஓடவில்லையே?


மோதி விளையாடு, மிரட்டல், ஒன்பதுலகுரு என சில படங்கள் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. காரணம், சினிமாவைப் பொறுத்தவரை எந்த படம் ஓடும். ஓடாது என்பதை கணிப்பதே முடியாத காரியம்.மேலும், உன்னாலே உன்னாலே ஹிட்டுக்குப் பிறகு என்னைத்தேடி ஏராளமான படங்கள் வந்தன.ஆனால் நான் அதில் எனக்குப்பிடித்ததாக ஓரிரு படங்களை மட்டுமே நடிக்க சம்மதித்தேன். இருப்பினும், இனிமேல் தோல்விகளை என்னை தொடரவிடக்கூடாது என்பதற்காக இன்னும் கவனமாக கதைகளை செலக்ட் பண்ணி நடிக்கிறேன் என்று சொல்லும் வினய், இப்போது நடித்துள்ள அரண்மனை, ஆயிரத்தில் இருவர் படங்களுக்குப்பிறகு தமிழில் நான் சைன் பண்ணி விடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு நூறு சதவிகிதம் உள்ளது என்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in