தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
போடா போடி படத்தில் அறிமுகமானவர் வரலட்சுமி. முதல் படத்தில் கிளாமர் மட்டுமின்றி, அசத்தலான நடனமும் ஆடிய அவர், தனக்குத்தானே டப்பிங் பேசி அசத்தியிருந்தார். அதனால் அடுத்தபடியாக விஷாலுக்கு ஜோடியாக மதகஜராஜா படத்தில் கமிட்டான வரலட்சுமி. அதே படத்தில் நடித்த இன்னொரு நாயகியாக அஞ்சலியே அதிரும் அளவுக்கு அதிரடி நாயகியாகவும் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் இன்னமும் வெளியாகவில்லை.
அதனால், அதன்பிறகு தமிழில் படமில்லாமல் கன்னடத்தில் நடித்து வந்த வரலட்சுமியை தனது தாரை தப்பட்டை படத்திற்கு கமிட் பண்ணிய பாலா, அவருக்கு பல மாதங்களாக கரகாட்ட பயிற்சி கொடுத்து இப்போது களத்தில் இறக்கி விட்டுள்ளார். இப்படத்தில் கரகாட்டக்காரியான அவர், ஒரு கட்டத்தில் விலைமாதுவாக மாறுகிறாராம். ஆக, முதல் பாதியில் கரகாட்டம், இரண்டாம் பாதியில் விலைமாது என இரண்டு அவதாரம் எடுக்கிறார் வரலட்சுமி.
முதலில் இந்த விலைமாது வேடத்தில் நடிக்க சற்றே தயங்கினாராம் வரலட்சுமி. ஆனால், பாலியல் தொழிலாளியாக நடித்த பிறகே ஸ்ரேயா, அனுஷ்கா, சினேகா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பல நடிகைகளின் திறமை வெளிச்சத்துக்கு வந்ததோடு, அதன்பிறகே அவர்கள் பிரபலமானார்கள் என்ற கதையை வரலட்சுமிக்கு எடுத்து சொன்னபோது தைரியமாகி விட்டாராம். அதோடு, தனக்கும் இந்த படம் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று தற்போது முழு ஈடுபாட்டுடன் பாலா படத்தில் நடித்து வருகிறாராம் வரலட்சுமி.