தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சூர்யா-ஜோதிகா நடித்த 'சில்லுன்னு ஒரு காதல்' படத்தை இயக்கிய கிருஷ்ணா, சிறிய இடைவெளிக்கு பிறகு ''நெடுஞ்சாலை'' என்ற படத்தை இயக்கினார். இதில் புதுமுகம் ஆரி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுகம் ஷிவதா நாயர் நடித்து இருந்தார். நெடுஞ்சாலையில் நடக்கும் கொள்ளை சம்பவத்தோடு ஒரு அழகிய காதல் கதையையும் மையப்படுத்தி இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டு இருந்தது. சமீபத்தில் வெளியான இப்படம் தமிழில் பெரிய வெற்றி பெறாவிட்டாலும், அனைவரின் பாராட்டை பெற்றது. அதேசமயம் மற்ற மொழிகளில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.
இந்நிலையில் இப்படம் இந்தியில் ரீ-மேக் ஆக இருக்கிறது. இதனை இயக்குநர் கிருஷ்ணா உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, மூன்று தயாரிப்பு நிறுவனங்கள் படத்தின் ரீ-மேக் உரிமையை கேட்டுள்ளனர். இதுதொடர்பாக நெடுஞ்சாலை படத்தின் தயாரிப்பாளர் இறுதிமுடிவு எடுப்பார் என்றார்.
இந்தியில் ரீ-மேக் ஆகும் நெடுஞ்சாலை படத்தை கிருஷ்ணா இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.