பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி படங்களுக்கு பிறகு நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் சிகரம் தொடு. தூங்காநகரம் இயக்குநர் கெளரவ் இயக்கியுள்ளார். விக்ரம் பிரபு ஜோடியாக மோனல் கஜார் நடித்துள்ளார். இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு இன்று(ஆகஸ்ட் 7ம் தேதி) நடந்தது. படத்தின் ஆடியோவை கமல் வெளியிட கே.எஸ்.ரவிக்குமார் பெற்றுக்கொண்டார். கூடவே படத்தின் டிரைலரும் வெளியிடப்பட்டது, இதனை தனுஷ் வெளியிட பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸ் பெற்றுக்கொண்டார்.
விழாவில் கமல் பேசுகையில், இயக்குநர் கெளரவ் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு என்னை அழைத்தபோது எனது கண்கள் பேசியதாக கூறினார். இந்தக்கண், அந்தக்கண்ணிடமிருந்து, அதாவது சிவாஜியிடமிருந்து கற்றுக்கொண்டது. சிவாஜி அடிக்கடி பேசும்போது அவரது மடியில் அதிகமாக தவழ்ந்தது கமல் தான் என்று என்னை கூறுவார், எனக்கு தெரிந்து அதற்கு அடுத்தபடியாக விக்ரம் பிரபு தான் அவரது மடியில் தவழ்ந்து இருப்பார். இந்தப்படத்தின் டைட்டீலுக்கு ஏற்ற மாதிரி விக்ரம் பிரபு சிகரம் போல் வர வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஒருவர் சினிமா குடும்பத்தில் இருந்து வந்தால் அவரது ஜீன்கள், ரத்தம் எல்லாவற்றிலும் நடிப்பு இருக்கும் அதனால் அவர் ஜெயித்து விடுவார் என்று சொல்ல முடியாது. கடுமையான உழைப்பு மற்றும் முயற்சி இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். விக்ரம் பிரபு கடுமையாக உழைக்கவும் செய்கிறார், அதனால் தான் அவர் இவ்வளவு தூரம் கடந்து வந்து இருக்கிறார்.
வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்த பலர் இந்த படத்தில் உழைத்து இருந்தாலும், இவர்கள் அனைவரும் அன்னை இல்லம் எனும் ஒரு வீட்டில் சேர்ந்துள்ளனர். இந்த சங்கமத்திற்கு என்னையும் அழைத்தது மகிழ்ச்சி, இந்த குடும்பத்திற்காக நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். இந்தப்படம் வெற்றி பெற எல்லோரையும் விட எனக்கு அக்கறை அதிகம். விக்ரம் பிரபு இன்னும் உயருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இங்கு இருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் உடன் ஐந்து படங்களில் வேலை பார்த்துள்ளேன். என்னை பார்த்து அவர் நிறைய கற்றுக்கொண்டதாக சொல்கிறார். நான் தான் அவரைப்பார்த்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். அவர் பெரிய கில்லாடி, மாவீரர், எந்த இடத்தில் அடிக்கணும், எந்த இடத்தில் மிரட்டணும், எந்த இடத்தில் உதைக்கணும் என எல்லாம் அவருக்கு தெரியும்.
ஜேசுதாஸ் பற்றி பேசும்போது, நான் குழந்தையாக இருக்கும்போது கேட்ட ஒரு குரல் இப்போதும் மாறாமல் ஒலித்து கொண்டு இருக்கிறது. வெங்கலத்தை உருக்கின மாதிரி ஒரு குரல் ஜேசுதாஸ் உடையது. அவருடன் நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறேன். இவன் நல்லா பாடுவான் என்று சொல்லி என்னையும் பாட வைத்தவர் என்றார்.
உத்தமவில்லன் படத்தில் இன்னும் இரண்டு நாள் ஷூட்டிங் மட்டுமே பாக்கி இருக்கிறது, விரைவில் இப்படம் வெளியாகும் என்றார்.
இந்த விழாவில் கமல் தவிர தனுஷ், கே.எஸ்.ரவிக்குமார், ஜேசுதாஸ், கேயார், பிரபு, ராம் குமார், சதீஷ் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு சிகரம் தொடு படக்குழுவை வாழ்த்தினர்.