Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் பெண்களை நாயகி ஆக்குங்கள் : குஷ்பு அட்வைஸ்

06 மே, 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

தமிழ் படத்தில் நடிக்க வைப்பதற்காக கதாநாயகிகளை தேடி மும்பைக்கும் கேரளாவுக்கு போவதை நிறுத்துங்கள். தமிழ் ‌பேச தெரிந்தவர்களை தமிழ் படங்களில் நடிக்க வையுங்கள் என்று தமிழ் திரையுலகிற்கு நடிகை குஷ்பு அட்வைஸ் செய்துள்ளார். நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் தயாரிப்பில், ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம், `வெளுத்து கட்டு' என்ற படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில், கதிர் - அருந்ததி என்ற புதுமுகங்கள் நாயகன் - நாயகியாக நடிக்கிறார்கள். சேனாபதி மகன் இயக்குகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டர் வளாகத்தில் நடந்தது. முதல் சி.டி‌.யை நடிகர் விஜய் வெளியிட, நடிகை குஷ்பு பெற்றுக் கொண்டார்.

அப்போது பேசிய குஷ்பு, ``ஒருவர் படம் தயாரிக்க விரும்பினால் உடனே தெரிந்த வடநாட்டு நடிகை யாராவது இருக்கிறாரா, வேற்றுமொழி நடிகை இருக்கிறாரா? என்றுதான் தேடுகிறார்கள். தமிழ் நாட்டிலேயே தமிழ் பேசும் அழகான பெண்கள் இருக்கிறார்கள். அவர்களை அறிமுகப்படுத்தலாம். தயாரிப்பாளர்கள் கதாநாயகிகளை தேடி கேரளாவுக்கும், மும்பைக்கும் போவதை நிறுத்த வேண்டும். நன்றாக தமிழ் பேச தெரிந்தவர்களை தேர்வு செய்து நடிக்க வைக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

நடிகர் விஜய் பேசுகையில், ``எங்க அப்பா எப்போதுமே ஓடுகிற குதிரையில் சவாரி செய்வதை விரும்ப மாட்டார். அவராகவே புது குதிரைகளை உருவாக்கி, அதில் சவாரி செய்வதையே விரும்புவார். அவர் புதுமுகங்களை வைத்து படம் பண்ணி, நிறைய வெற்றிகளை கொடுத்து இருக்கிறார். விஜயகாந்த், ரகுமான், நான் போன்றவர்கள் அப்பாவின் கண்டுபிடிப்புகள்தான். சிம்ரனைக்கூட `ஒன்ஸ்மோர்' படத்தில் அப்பாதான் அறிமுகம் செய்தார். இந்த படத்தில் கதிர், அருந்ததி என்ற இரண்டு பேர்களை அறிமுகம் செய்து இருக்கிறார். என் அப்பாவின் சுறுசுறுப்பு என்னை வியக்க வைக்கிறது, என்றார்.

நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் கலந்து கொண்டு பேசினார். `குஷ்பு மேல்சபை உறுப்பினர் ஆகப்போகிறார் என்று பேச்சு அடிபடுகிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள். வரப்போகிற மேல்சபையில் பெண்கள் 50 சதவீதம் இருந்தால் நல்லது, என்றார் பார்த்திபன். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், செயலாளர்கள் சிவசக்தி பாண்டியன், கே.முரளிதரன், பொருளாளர் காஜாமைதீன், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் `கலைப்புலி' ஜி.சேகரன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன், பட அதிபர்கள் ஆர்.பி.சவுத்ரி, `கலைப்புலி' எஸ்.தாணு, எடிட்டர் மோகன், டி.சிவா, கே.எஸ்.சீனிவாசன், டைரக்டர்கள் ஆர்.கே.செல்வமணி, பேரரசு, ஏ.வெங்கடேஷ், பாடல் ஆசிரியர்கள் நா.முத்துக்குமார், சினேகன், இசையமைப்பாளர் பரணி ஆகியோரும் பேசினார்கள்.

விழாவில் பங்கேற்ற அனைவரும் பேசினாலும், நடிகை குஷ்பு தமிழ் திரையுலகிற்கு விடுத்த அட்வைஸ்தான் நிகழ்ச்சிக்கு வந்தவர்களிடையே பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. குஷ்பு தமிழ் சினிமாவில் நடிக்க வந்தபோது அவருக்கு தமிழ் தெரியுமா? என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். அதானே?

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

கோபி கண்ணன் - chennai,இந்தியா
13 அக், 2011 - 18:56 Report Abuse
 கோபி கண்ணன் கொஞ்சம் நன்றாக படித்துப் பாருங்கள். இனியாவது வெளியில் தேடாமல்,தமிழ்நாட்டில் தேடுங்கள்,தமிழரை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்கிறார்.அதை நீங்கள் தவறாக நினைக்காதீர்கள்.. பழயதை மறந்து புதுமையை தேடுங்கள்
Rate this:
BAS - india,இந்தியா
21 ஏப், 2011 - 12:28 Report Abuse
 BAS கொடுமையட சாமி
Rate this:
sara - dubai,இந்தியா
04 ஆக, 2010 - 12:00 Report Abuse
 sara குஸ்பூ மகள் குட இப்ப தமிழ் பொண்ணுதான் அthaனலத்தான்
Rate this:
P.S.KUMAR - coimbatore,இந்தியா
07 ஜூலை, 2010 - 15:40 Report Abuse
 P.S.KUMAR நீ நடிக்க வருவதற்கு முன்னால் இப்படி யாராவது சொல்லி இருந்தால் நீ சினிமாவுக்கு வந்து இருப்பாயா, தமிழ் பெண்களையும் தமிழ் கலாச்சாரத்தையும் கெடுக்கவே நீ தமிழ்நாட்டிற்கு வந்தாய் .தமிழ் பெண்களை pattti சொல்ல உனக்கு அருகதை கிடையாது .
Rate this:
raj - chennai,இந்தியா
29 ஜூன், 2010 - 10:17 Report Abuse
 raj பாவனா யு ஆர் கரெக்ட்
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in