Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யாவின் உஷார் நடவடிக்கை!

05 ஆக, 2014 - 10:42 IST
எழுத்தின் அளவு:

ஹரியின் சிங்கம்-2 படத்தில் நடித்த பிறகு கெளதம்மேனன் படம்தான் என்பதில் உறுதியாக இருந்தார் சூர்யா. ஆனால், அதையடுத்து அலுவலக பூஜை போடப்பட்டு அடுத்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பம் என்று அவர்கள் கூறிவந்தனர். அந்த நிலையில், கெளதம் சொன்ன கதையில் திருப்தியடையாத சூர்யா அதன்பிறகு சீமான், லிங்குசாமி ஆகியோரிடம் கதை கேட்டார். அதில் லிங்குசாமி சொன்ன கதை பிடித்து விடவே உடனே அவருக்கு கால்சீட் கொடுத்து இப்போது அஞ்சான் என்ற அந்த படத்தில் நடித்து முடித்துவிட்டார்.


இந்தநிலையில், ஏற்கனவே ஒரு முறை கதை பிரச்சினை காரணமாக பல மாதங்களாக எந்த படத்தில் நடிப்பது என்பது புரியாமல் குழம்பிப்போன சூர்யா, இப்போது உஷாராகி விட்டார். அதாவது ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அடுத்து எந்த டைரக்டரின் படத்தில நடிப்பது என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்கிறார்.


அந்த வகையில், அஞ்சானில் நடித்தபோது அடுத்து வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்தில் நடிப்பது என்று முடிவெடுத்த சூர்யா, இப்போது அந்த படத்தின் படப்பிடிப்பில் இறங்கிவிட்டார். இந்த நேரத்தில் அதற்கடுத்து தான் யார் இயக்கத்தில் நடிப்பது என்பதையும் தற்போது முடிவு செய்திருக்கிறார். அதுபற்றி சூர்யாதரப்பு வெளியிட்டுள்ள செய்தியில், மாஸ் படத்தை முடித்ததும், தமிழில் மாதவன் நடித்த யாவரும் நலம் மற்றும் சமீபத்தில் தெலுங்கில் வெளியான மனம் படங்களை இயக்கிய விக்ரம்குமார் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.


அவர் சொன்ன கதையை கேட்டு முழு திருப்தி அடைந்த சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலமே அந்த படத்தை தயாரித்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in