தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கு படங்களில் வளர்ந்து வரும் நடிகை அஞ்சலி திவிவேதி. மத்திய பிரதேசத்தை சேர்ந்த இவர் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தற்போது இந்தி படங்களில் நடிப்பதற்காக மும்பை மலாடு பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வாய்ப்பு தேடி வருகிறார். பட வாய்ப்புக்காக அஞ்சலி திவிவேதி தான் தனியாக போட்டோ ஷூட் நடத்தி எடுத்த புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனங்களிடம் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்களை மார்பிங் செய்து நிர்வாணமாக போஸ் கொடுத்திருப்பது போன்று யாரோ சிலர் அவர் பெயரில் டுவிட்டர் கணக்கு துவங்கி அதில் வெளியிட்டுள்ளனர்.
இதனை நண்பர்கள் மூலம் அறிந்து அதிர்ச்சி அடைந்த அஞ்சலி, மால்வாணி போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று புகார் கொடுத்தார். போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்து போலி டுவிட்டர் கணக்கை முடக்கினர். போலி டுவிட்டர் கணக்கை துவக்கியவர்களை தேடி வருகிறார்கள்.