Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதல்வர் ஜெயலலிதா பற்றி சர்ச்சை கட்டுரை! இலங்கை அரசை கண்டித்து தமிழ் திரையுலகினர் ஆர்ப்பாட்டம்!

02 ஆக, 2014 - 15:46 IST
எழுத்தின் அளவு:

முதல்வர் ஜெயலலிதா பற்றி சர்ச்சை கட்டுரையை வெளியிட்ட இலங்கை அரசை கண்டித்து தமிழ் திரையுலகினர் சார்பில் ஆகஸ்ட் 4ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.


தமிழக மீனவர் விவகாரம், இலங்கையில் நடைபெற்ற போர்குற்றம், கச்சத்தீவு விவகாரம் போன்றவை குறித்து, இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர், ஜெயலலிதா அடிக்கடி கடிதம் எழுதுவதை கிண்டல் செய்து, இலங்கை ராணுவ இணைய தளத்தில், கேலிச் சித்திரத்துடன் சில ஆட்சேபகரமான வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.இதை அறிந்த தமிழக எம்.பி.,க்கள் பார்லிமென்டில் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். அ.தி.மு.க., பா.ஜ., - பா.ம.க., - ம.தி.மு.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.,க்கள், இலங்கை அரசின், செயலை கண்டித்தனர். தமிழகத்தின் பல பகுதிகளில், இலங்கை அரசுக்கு எதிராக அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பை அடுத்து இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதோடு அந்த செய்தியையும் நீக்கியது. இந்நிலையில், இலங்கை அரசின் இந்த செயலை கண்டித்து தமிழ் திரையுலகினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர்.


இதுதொடர்பாக தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் அவசர கூட்டம் இன்று(ஆகஸ்ட் 2ம் தேதி) நடந்தது. கூட்டத்திற்கு பிறகு இயக்குநர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, மீனவர்களின் வாழ்வாதாரங்களையும், வாழ்வையும் பாதுகாப்பவர் நமது முதல்வர் ஜெயலலிதா. அப்படிப்பட்டவரை இலங்கை அரசு உள்நோக்கத்துடன் ஆபாசமாக சித்தரித்து அவமானப்படுத்தியுள்ளது. எல்லாவற்றையும் செய்துவிட்டு இப்போது நிபந்தனையற்ற மன்னிப்பு என்ற போர்வைக்குள் மறைந்து கொள்ள முயல்கிறது இலங்கை அரசு.


இப்போது மட்டுமல்ல தமிழர்களின் உரிமை வாழ்க்கை ஆகியவற்றை பாதுகாக்க முதல்வர் தொடர்ந்து போராடும் போதெல்லாம் அதை குற்றம் சாட்டுவதையோ, கேவலப்படுத்துவதையோ அல்லது கொச்சைப்படுத்துவதையோ வழக்கமாக கொண்டுள்ளது இலங்கை அரசு. தொடர்ந்து தமிழர்களின் உணர்வுகளை புறக்கணிப்பதோடு முதல்வரையும் கொச்சைப்படுத்தி வரும் இலங்கை அரசின் ஒட்டு வாலாக இருக்கும் இலங்கை துணை தூதரகம் தமிழ்நாட்டிற்கு தேவையற்ற ஒன்றாகும். இதை உடனடியாக மூட வலியுறுத்தி, வருகிற ஆகஸ்ட் 4ம் தேதி, காலை 10 மணியளவில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இலங்கை துணை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் திரைப்படத்துறையை சேர்ந்த அனைத்து இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள், தொழிலாளர்கள், தொழில்நுட்பகலைஞர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்களும் ஆதரவு தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in