தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கயல் படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்து விட்டு டப்பிங் பணியில் பிசியாக இருக்கிறார் பிரபு சாலமன். மைனா, கும்கி, இப்போது கயல் படங்களில் அவர் முற்றிலும் புதுமுகங்களையே இயக்கி வருகிறார். இது பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது: என்னுடைய படங்களில் அர்ஜுன், விக்ரம், கரண் நடித்திருக்கிறார்கள். ஆனால் மைனாவில் இருந்து என் பாதை மாறிவிட்டது. உண்மைக்கு நெருக்கமாக இருந்து படம் எடுக்கிறேன். அதற்கு நிறைய மெனக்கெடுகிறேன். சிரமப்படுகிறேன். என்னோடு சேர்ந்து சிரமங்களை அனுபவிக்க புதுமுங்கள்தான் சரியாக இருப்பார்கள்.
மைனாவில் அமலாபாலை காடுமேடுகளில் செருப்பு போடாமல் அலைய வைத்தேன். அதை பெரிய நடிகைகளை வைத்து செய்ய முடியுமா. கும்கி படத்தில் துணிச்சலாக யானையுடன் பழக வேண்டும். அதன் மூடுகேற்ப படம் எடுக்க வேண்டும் அதுவரை மேக்அப்போடு காத்திருக்க வேண்டும் பெரிய நடிகர்கள் செய்வார்களா. கயல் படம் சுனாமி சோகம் பற்றியது. ஹீரோ கடலுக்குள் தவிக்கும் காட்சியை ராட்சத தண்ணீர் தொட்டி கட்டி அதில் தினமும் 7 மணிநேரம் மிதக்க விட்டு படம் பிடித்தோம். அதனை பெரிய நடிகர்கள் எப்படி செய்ய முடியும். அதனால்தான் புதுமுகங்களை வைத்து படம் எடுக்கிறேன். என்றார்.