தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபகாலமாக தான் இசையமைக்கும் படங்களில்கூட முன்பு மாதிரி பின்னணி பாடுவதில்லை இளையராஜா. அப்படிப்பட்ட அவரை சீனுராமசாமி இயக்கியுள்ள இடம் பொருள் ஏவல் படத்தில் பாட வைக்க ஒரு முயற்சி நடக்கிறது. யுவன் இசையமைக்கும் அந்த படத்தில் வைரமுத்து எழுதிய பாடலை இளையராஜா பாடுவாரா? மாட்டாரா? என்பதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கியுள்ள வை ராஜா வை படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் ஒரு பாடலை பாடியிருககிறார் இளையராஜா. அந்த பாடலை எழுதியிருப்பவர் தனுஷ். ஏற்கனவே மனைவி இயக்கிய 3 படத்தில் ஒய் திஸ் கொலவெறி என்ற பாடலை எழுதி பாடி பாடகராகவும் பிரபலமானவர் தனுஷ்.
ஆனால். இப்போது தான் எழுதிய பாடலை இளையராஜா பாடியிருப்பது அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இதுவரை நான் எத்தனை பாடல்கள் எழுதி பாடியிருந்தாலும் அதெல்லாம் எனக்கு பெரிதில்லை. ஆனால் என் பாடலை இளையராஜா சார் பாடியிருப்பதுதான் எனக்கு பெருமை என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் தனுஷ்.