தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
உன்னை சரணடைந்தேன் என்ற படத்தை வெங்கட்பிரபுவை ஹீரோவாக வைத்து இயக்கியவர் சமுத்திரகனி. அதையடுத்து விஜயகாந்த் நடித்த நெறஞ்ச மனசு படத்தையும் இயக்கினார். ஆனால் இரண்டு படங்களுமே தோல்வியடைந்தன. அதனால் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல், ராதிகாவின் ராடன் டி.விக்காக கதை வசனம் எழுதினார் சமுத்திரகனி.
அதையடுத்து 5 ஆண்டுகளுக்கு பிறகு சசிகுமாரை வைத்து நாடோடிகள் என்ற படத்தை இயக்கி வெற்றி பெற்ற சமுத்திரக்கனி கோலிவுட்டில் கவனிக்கப்படும் இயக்குனர் பட்டியலில் இடம் பிடித்தவர் தொடர்ந்து போராளி, நிமிர்ந்து நில் போன்ற படங்களை இயக்கினார்.
இதற்கிடையே சசிகுமார் இயக்கி நடித்த சுப்ரமணியபுரம் படத்தில் வில்லனாக முதன்முறையாக அரிதாரம் பூசிய சமுத்திரகனி, தொடர்ந்து ஈசன், சாட்டை, நீர்ப்பறவை, வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் ஆசிரியர், அப்பா, போலீஸ் என மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்தவர், தற்போது வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் மீண்டும் வில்லனாக நடிக்கிறார்.
சுப்பிரமணியபுரம் படத்தில் டயலாக்கில் மட்டுமே வில்லத்தனத்தை வெளிப்படுத்திய சமுத்திரகனி இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளிலும் நடிப்பதாக கூறப்படுகிறது.