ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
வடிவேலுவுடன் இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் நடித்த ஸ்ரேயாவை அதன்பிறகு எந்த ஹீரோக்களும் தங்களுக்கு ஜோடியாக்க அனுமதிக்கவில்லை. அதேபோல் கருணாசுடன் நடித்த நடிகைகளும் அதன்பிறகு காணாமல் போய் விட்டனர். அதே நிலைதான் இப்போது சந்தானத்துடன் நடித்துள்ள நடிகைகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது.
அதாவது சேது, பவர்ஸ்டாருடன சந்தானம் இணைந்து மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்த படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா. இந்த படத்தில் நடித்தவர்தான் விசாகா சிங். ஏற்கனவே பிடிச்சிருக்கு என்ற படத்தில் நடித்தபோதும் இந்த படம்தான் அவரை ரசிகர்களுக்கு அடையாளம காட்டியது. அதோடு வெற்றிப்பட நடிகையானதால் அதன்பிறகு புதிய படங்கள் அவரை முற்றுகையிடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அதன்பிறகும் விசாகாவுக்கு அதே சேது, சந்தானம் நடித்த வாலிபராஜா பட வாய்ப்பு கிடைத்த நிலையில், விமலுடன் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா என்ற படத்திலும் நடித்துள்ளார்.
ஆனால், சந்தானம் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும ஆயுதம் படத்தில் நடித்த ஆஷ்னா சவேரிக்கு அதன்பிறகு எந்த படமும் புக்காகவில்லை. அதனால் சந்தானம் மீண்டும் நாயகனாக நடிக்கும் படவாய்ப்பை கைப்பற்றி விட மும்பையில் இருந்து அவ்வப்போது போன் போட்டு அவருக்கு குடைச்சல கொடுத்துக்கொண்டிருக்கிறாராம்.
இந்த நிலையில, லட்டு நடிகை விசாகாசிங்கும் தனக்கே அடுத்த படத்தில் நாயகி வாய்ப்பு தர வேண்டும் என்று சந்தானத்தை துரத்தத் தொடங்கியிருக்கிறார். இதனால் நிறுத்தி நிதானமாக யோசித்த சந்தானம், ஒரு நடிகைக்கு சான்ஸ் கொடுத்து இன்னொருத்தருக்கு சான்ஸ் கொடுக்கவில்லை என்றால் கெட்டப்பெயர் வரும். அதனால் இரண்டு பேருக்குமே ஒரே படத்தில் சான்ஸ் கொடுக்க முடிவெடுத்திருக்கிறாராம். ஆக ,தான் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்தில் டபுள் ஹீரோயின் தான் என்பதை இப்போதே முடிவெடுத்து விட்டார் சந்தானம்.