டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தற்போது படங்களில் ஆபாச வசனமோ, அல்லது பிரச்னைக்குரிய காட்சியோ இருந்தால், அந்த வசனத்தை மவுனித்து விடுவார்கள். வாய் மட்டும் அசையும் சத்தம் வராது. அதேபால தொப்புள், மார்பு பகுதி தெரிந்தால் அதனை மங்கலாக்கி மறைப்பார்கள். இனி இந்த வேலை கிடையாது. அதனை முற்றிலுமாக நீக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
இதுபற்றி மத்திய தணிக்கை குழு முதன்மை செயல் அதிகாரி ராகேஷ் குமார் கூறியிருப்பதாவது: திரைப்படங்களில் ஆபாச காட்சிகள், வசனங்களை முற்றிலும் நீக்க முடிவு செய்திருக்கிறோம். குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தயவுதாட்சண்யமின்றி நீக்கப்படும். வசனங்களை மவுனித்தாலும், காட்சிகளை மங்கலாக்கினாலும் படம் பார்க்கும் ஆடியன்சுக்கு அது புரிந்து விடுகிறது. அதனால் இனி மவுனித்தல், மறைத்தல் இன்றி நேரடியாக காட்சிகளை நீக்க இருக்கிறோம். அப்படி நீக்கினால் மட்டுமே யு சான்றிதழ் வழங்கப்படும். என்கிறார் ராகேஷ் குமார்.