கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் கலெக்டராக நடித்தவர் அரவிந்த்சாமி. அதையடுத்து ரோஜா, பம்பாய், என் சுவாசக்காற்றே, இந்திரா, மின்சாரகனவு என பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால், ஒரு கட்டத்தில் தனக்கேற்ற கதைகள் அமையவில்லை என்றதும், நடிப்பை விட்டு விலகியிருந்தார் அரவிந்த்சாமி.
ஆனால் அப்படியிருந்தவரை 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே மணிரத்னம் தனது கடல் படத்தில் நடிக்க வைத்தார். அந்த படத்தில் பாதிரியாராக நடித்த அரவிந்த்சாமிக்கு உடனடியாக தமிழில் படங்கள் கிடைக்கவில்லை. அதனால் மலையாளத்தில் ப்ருதிவிராஜூடன் ஒரு படத்தில் நடித்தவர், இப்போது இந்தியிலும் ஒரு படத்தில் நடிக்கிறார். அப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.
இதற்கிடையே கெளதம்மேன்ன இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் அரவிந்த்சாமிதான் வில்லனாக நடிப்பதாக இருந்தது. ஆனால், போட்டோசெஷனுக்குப்பிறகு தான் எதிர்பார்த்த வில்லனாக அரவிந்த்சாமியின் தோற்றம் இல்லை என்று அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்து விட்டார் கெளதம்மேனன்.
இந்த நிலையில், தற்போது ஜெயம்ராஜா இயக்கத்தில் ஜெயம்ரவி-நயன்தாரா நடித்து வரும் தனி ஒருவன் படத்தில் அரவிந்த்சாமி வில்லன் வேடத்தில் நடிப்பதாக செய்தி வெளியிட்டுள்ளனர். இதையடுத்து வில்லனாக இந்திய அளவில் ஒரு மெகா ரவுண்டு வரவும் திட்டமிட்டுள்ளாராம் அரவிந்த்சாமி.