டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
எல்லோருக்கும் ஒரு பாதை என்றால் எனக்கு மட்டும் ஒரு தனி பாதை என்பார் டைரக்டர் பாலா. அவரது கதை மட்டுமின்றி நடிகர்-நடிகை செலக்சனும் அப்படித்தான் இருக்கும். அந்த வகையில் தனது, சேது படத்தில் இருந்து அவன் அவன், பரதேசி படங்கள் வரை வித்தியாசமான வில்லன்களை நடிக்க வைத்த பாலா, இப்போது சசிகுமார்-வரலட்சுமியை வைத்து இயக்கி வரும் தாரை தப்பட்டை படத்திற்க்காகவும் கடந்த சில மாதங்களாக தீவிரமாக வில்லன் நடிகரை தேடி வந்தார்.
ஆனால், சினிமாக்களில் நடித்து வரும் வில்லனாக அவர் தேடவில்லை. இதுவரை நடிக்காத வித்தியாசமான வில்லனாக தேடி வந்தார். அப்படி அவர் தேடிவந்தபோது அவரது கண்ணில் பட்டவர்தான் ஸ்டுடியோ 9 சுரேஷ். தனது வில்லன் கதாபாத்திரததிற்கு நன்றாக பொருந்துவார் என்று நினைத்த பாலா, அவரை அழைத்து பேசியிருக்கிறார்.
நடிக்க வேண்டும் என்றதும் முதலில் அவர் தயங்கினாராம். அதன்பிறகு பாலா கதையை விளக்கியபோது, நீங்கள் சொல்லித்தருவதை அப்படியே செய்கிறேன். மற்றபடி எனக்கு நடிப்பைப்பற்றி எதுவும் தெரியாது எனறு சொன்னாராம். அதற்கு, எனக்கும் அந்த மாதிரி வில்லன்தான் தேவை என்று சொல்லி அவர் புக் பண்ணி விட்டாராம்.
அதோடு, இந்த தாரை தப்பட்டை வெளிவந்தால், தமிழ் சினிமாவின அடுத்த மெகா வில்லன் நீங்கள்தான். இந்த கதை அந்த அளவுக்கு உங்களை பிமாண்டமாக்கி காட்டும் என்றும் நம்பிக்கை கொடுத்துள்ளாராம் பாலா.