பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஜய் என்றாலே மூடி டைப், யாரிடமும் அதிகமாக பேச மாட்டார் என்றொரு கருத்து உள்ளது. ஆனால் விஜய்யுடன் கத்தி படத்தில் நடித்துள்ள சமந்தா அவரைப்பற்றி வேறு மாதிரியாக சொல்கிறார்.
அதாவது, இதுவரை நான் எத்தனையோ மெகா ஹீரோக்களுடன் நடித்து விட்டேன். அவர்களில் விஜய் மாதிரி ஒரு எளிமையான நடிகரை பார்க்கவே முடியாது. அவருக்கென்று கேரவன் கொடுத்தாலும் அதை அவர் யூஸ் பண்ணுவதே இல்லை. படத்தில் தன்னுடன் நடிக்கும் நடிகர்-நடிகைகளிடம் தான் பேசிக்கொண்டிருப்பார்.
நான்கூட கத்தியில் நடிக்க முதல்நாள் ஸ்பாட்டுக்கு சென்றபோது, விஜய்யை மூடியானவர் யாரிடமும் பேசகூட மாட்டார் என்று சிலர் சொன்னதை நம்பி விலகியே நின்றேன். ஆனால் அவர் தனது ஷாட்டில் நடித்து முடித்ததும் கேரவனுககுள் செல்லாமல், அனைவரும் அமர்ந்திருக்கும் இடத்துக்கு வந்து ஏதாவது பேசிக்கொண்டிருப்பார். அதே படத்தில் நடிக்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்தாலும் அவர்களிடம் அன்பாக பேசிப்பழகினர்.
அதன்பிறகுதான் விஜய்யை அனைவரிடமும் பேசிப்பழகும் எளிமையான மனிதர் என்பதை புரிந்து கொண்டேன். அதோடு, அவ்வப்போது ஏதாவது ஜோக் அடித்துக்கொண்டேயிருப்பார். அந்த வகையில், விஜய் மாதிரி முன்னணி ஹீரோக்கள் யாருமே சக கலைஞர்களுடன் இவ்வளவு ஜாலியாக பேசிப்பழகுவதை நான் பார்த்ததே இல்லை. அந்த வகையில் விஜய்யின் எளிமையான, யதார்த்தமான கேரக்டர் என்னை ரொம்பவே வியக்க வைத்தது என்கிறார் சமந்தா.