துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
சூர்யா நடித்துள்ள அஞ்சான் படத்திற்கு யு சான்று கிடைத்துள்ளதால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது. சிங்கம்-2 படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் அஞ்சான். முதன்முறையாக சூர்யா, சமந்தாவுடனும், லிங்குசாமி இயக்கத்திலும் நடித்துள்ளார். மும்பையை மையமாக வைத்து அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகி உள்ள அஞ்சான் படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து, போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடைபெற்று வந்தன, தற்போது அதுவும் முடிந்து ரிலீஸ்க்கு தயாராக இருந்த நிலையில், படத்தை சென்சொருக்கு அனுப்பி வைத்தனர். மும்பையில் தணிக்கை செய்யப்பட்ட அஞ்சான் படத்திற்கு, தணிக்கை குழுவினர், படத்தில் ஒரு கட் கூட கொடுக்காமல் யு சான்று அளித்துள்ளனர். யு சான்று படத்திற்கு வரிவிலக்கு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடைக்கும், இதனால் லிங்குசாமி, சூர்யா, தனஞ்செயன் உள்ளிட்ட அஞ்சான் டீமே மகிழ்ச்சியில் உள்ளனர்.
யு சான்று கிடைத்ததை தயாரிப்பாளர் யுடிவி தனஞ்செயன் தன் டுவிட்டரில் மகிழ்ச்சி பட கூறியுள்ளார். அதாவது, தணிக்கை அதிகாரிகள் படத்தை மிகவும் ரசித்து பார்த்தனர், படம் நன்றாக இருப்பதாக தெரிவித்து யு சான்று கொடுத்துள்ளனர். படம் சொன்ன தேதியில் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும். மேலும் அஞ்சான் படத்திற்கான புது டிரைலரும் தயாராகி வருகிறது, அதற்கான வேலைகளில் லிங்குசாமி மும்முரமாக ஈடுபட்டுள்ளார், அடுத்தவாரம் புது டிரைலரை வெளியிட உள்ளோம் என்று கூறியுள்ளார்.