பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படம் குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் |
சில திரைப்படக் கலைஞர்களையும், சர்ச்சைகளையும் பிரிக்கவே முடியாது. அப்படிப்பட்ட கலைஞர்களில் ஒருவர்தான் ராம்கோபால் வர்மா. இவர் எதையாவது ஒன்றைச் சொல்லி அதை சர்ச்சையாக மாற்றுவதில் கை தேர்ந்தவர். சமீப காலமாக டுவிட்டர் மூலம் இவர் வெளியிடும் ஒவ்வொரு கருத்துக்களும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. பத்திரிகையாளர்களுடன் மோதல், விமர்சகர்களுடன் மோதல், என எதையாவது செய்து பரபரப்பான செய்திகளில் இடம் பெறுவது அவருக்கு வழக்கமாகி விட்டது.
தெலுங்கின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரும், நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவருமான கிருஷ்ணவம்சி சில தினங்களுக்கு முன் அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். இவர் ஆரம்ப காலங்களில் ராம்கோபால் வர்மாவிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். அதன் பின் இயக்குனராக அறிமுகமாகி பல ஹிட் படங்களைக் கொடுத்தவர். தற்போது ராம் சரண் தேஜா, காஜல் அகர்வால் நடிக்கும் 'கோவிந்துடு அந்தாரிவாடிலே' படத்தை இயக்கி வருகிறார்.
இவருக்கு ராம்கோபால் வர்மா பிறந்த நாள் வாழ்த்துக் கூறியது ஒரு புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பொதுவாக பிறந்த நாள் வாழ்த்தில் அனைவரும் வாழ்த்துதான் தெரிவிப்பார்கள். ஆனால், ராம்கோபால் வர்மா என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பாருங்கள். “வம்சி காரு பிறந்த நாளும், இறந்த நாளும் அசிங்கமான ஒன்றுதான், ஆனால் சில முட்டாள்தனமான காரணத்தால் உங்களைப் பொருட்டு, அது வித்தியாசமாக அமைகிறது. உங்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்,” எனக் கூறியிருக்கிறார்.
படத்தில்தான் சர்ச்சையை உருவாக்குகிறார் என பார்த்தால் வாழ்த்துவதிலும் கூடவா...?