சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி |
விஷால் கடைசியாய் நடித்த நான் சிகப்பு மனிதன் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. அந்தப் படத்தை தொடர்ந்து ஹரியின் பூஜை படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இப்படம் முடியும் முன்பாக தனது அடுத்த படத்தையும் ஆரம்பித்துவிட்டார். சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்திற்கு ஆம்பள என்று தலைப்பு வைத்துள்ளனர். ஆனால் இன்னும் இது உறுதியாகவில்லை. இந்நிலையில், சுந்தர்.சி. இயக்கும் படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் தொடங்கிவிட்டது. பத்து நாட்கள் நடைபெற உள்ள படப்பிடிப்பில் விஷால் கலந்து கொண்டு நடித்து வருகிறார். கதாநாயகன் கதாநாயகி தவிர மற்ற வேடங்களில் நடிக்கும் கலைஞர்களையே இன்னும் தேர்வு செய்யவில்லை. கும்பகோணம் ஷெட்யூலை முடித்துவிட்ட வந்த பிறகுதான் மற்ற கலைஞர்கள் தேர்வு நடைபெற உள்ளதாம்.