‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! |
வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் பிரவீண்காந்த் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள புலிப்பார்வை திரைப்படம், பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் கதை என்றுசொல்லப்பட்டு வருகிறது. பிரபாகரனின் மகன் பாலசந்திரனாக ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சத்யா என்ற மாணவன் நடித்திருக்கும் புலிப்பார்வை படம் குறித்து, "ஈழப்போரின்போது பிரபாகரனின் 13 வயது மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக்கொன்ற சம்பவத்தை அடிப்படையாக வைத்து, அவனுடைய மரணத்தை மறு விசாரணை செய்யும் விதத்தில் ஒரு வரலாற்றுப்பதிவாய் எடுத்திருக்கிறோம். பாலச்சந்திரன் சுட்டுக் கொல்வதற்கு முன் இலங்கை ராணுவத்தினரால் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சேனல் 4 நிறுவனம் இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அந்த பாலகனுடைய பார்வை அனைவரையும் உலுக்கியது. அந்த பார்வையை பதிவு செய்யும்விதமாய் படத்திற்கு புலிப்பார்வை என பெயர் வைத்துள்ளோம்! என்று பிரவீண்காந்த் சொல்லி வருகிறார்.
கண்களில் மரண பயத்துடன் கிலி பார்வை பார்க்கும் ஒரு பாலகனின் பார்வையை புலிப்பார்வை என்று சொல்கிற படம்தான் இது. இந்தப் படம் எப்படி ஈழ ஆதரவு திரைப்படமாக இருக்கும்? என்று கேட்கும் தமிழ் ஆர்வலர்கள் இப்படத்துக்கு எதிராக போராட தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், புலிப்பார்வை படத்தின் இயக்குநரான பிரவீண்காந்தி சாமர்த்தியாகமாக ஒரு காரியம் செய்திருக்கிறார். இரண்டு தினங்களுக்கு முன் அதாவது 28.07.2014 திங்கள் கிழமை இரவு சென்னையில் உள்ள பிரசாத் லேபில் புலிப்பார்வை படத்தை சீமானுக்கு திரையிட்டு காட்டி இருக்கிறார். படத்தைப் பார்த்த சீமான் ஆட்சேபத்துக்குரிய, அதாவது விடுதலைப்புலிகளுக்கு எதிரான காட்சிகளை படத்திலிருந்து நீக்கச் சொல்லி இருக்கிறார். அதற்கு பிரவீண்காந்தி சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பை சமாளித்துவிட்டதாக எண்ணி சந்தோஷத்தில் இருக்கிறார் பிரவீண்காந்தி.