கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தற்போது மெட்ராஸ் படத்தில் நடித்து முடித்துள்ள கார்த்தி, அடுத்தப்படியாக கொம்பன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று கார்த்தி, திடீரென தனது வீட்டில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது நலமாக உள்ளார்.
இந்நிலையில், அஞ்சான் தொடர்பான விளையாட்டு ஒன்று இன்று(ஜூலை 29ம் தேதி) அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் பங்கேற்ற சூர்யாவிடம், கார்த்தியின் உடல்நிலை குறித்து கேட்டபோது, கார்த்தியின் உடம்பில் நீர்சத்து குறைந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டது. தற்போது அவர் நலமாக இருக்கிறார். உடல்நிலை தேறியவுடன் வழக்கம் போல் அவரது பாணியில் நர்ஸ்கள், டாக்டர்கள் என்று எல்லோரையும் கலாய்த்து கொண்டு இருக்கிறார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அவர் தங்கியிருந்த அறை எண் 420, அதனால் தான் தன்னை இந்த அறையில் அனுமதித்து உள்ளனர் என்று நக்கல் செய்து கொண்டு இருந்தார்.
இவ்வாறு சூர்யா கூறினார்.