கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தவர் ஜனனி அய்யர். தமிழ்நாட்டு பெண்ணான இவரை அதன்பிறகு ஸ்ரீகாந்துடன் பாகன் படத்தில் நடித்தவர், பின்னர் தெகிடி என்ற படத்தில் புதுமுக நடிகருடன் நடித்தார். ஆனால், அந்த படத்தில் ஆடியோ விழா சென்னையில நடந்தபோது, விழாவுக்கு வந்த கரு.பழனியப்பன் உள்ளிட்ட சில டைரக்டர்கள் நடிகைகளை தங்களது பெயருக்கு பின்னால் ஒட்டியிருக்கும் ஜாதிப்பெயரை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
மேலும், ஜாதி மதங்களை மறந்து விட்டு மக்கள் அனைவரும் ஒன்றுகூடி அமர்ந்திருக்கும் இடம் சினிமா தியேட்டர். அதனால் அங்கேயும் அவர்களுக்கு ஜாதியை நினைவுபடுத்துவது போன்று நடிகைகள் தங்கள் பெயருடன் ஜாதியை குறிப்பிடுவது சரியல்ல என்றும் கருத்து சொன்னார்கள்.
ஆனால் அப்போது அதுபற்றி எந்த கருத்தும் ஜனனி அய்யர் சொல்லவில்லை. ஆனால், இப்போது மரியான் படத்தில் நடித்த பூ பார்வதி தனது பெயருக்கு பின்னால் இருந்த மேனனை கத்தரித்து விட்டதால், ஜனனி அய்யரும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது பெயரில் இருந்த அய்யரை நீக்கி விட்டதாக அறிவித்துள்ளார். அதோடு, மீடியா நண்பர்களும் இனி என்னை ஜனனி என்றே குறிப்பிடுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.