ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
சொந்த பந்தம், உயிர்மை, சித்திரம் பேசுதடி தொடர்களில் நடித்துக் கொண்டிருப்பவர் அஸ்ருதா. தெகிடி படத்தில் ஜனனி அய்யரின் தோழியாகவும், திருமணம் என்னும் நிக்காஹ் படத்தில் ஜெய்யின் முறைப்பெண்ணாகவும் நடித்தார். தற்போது கடல் தந்த காவியம் என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆகிவிட்டார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: நான் நடித்து வரும் தொடர்களில் நான் ஹீரோயினாக இல்லாவிட்டாலும் எனது கேரக்டர் முக்கியமானதாக இருக்கிறது. சீரியல்களில் எனது நடிப்பை பார்த்துதான் சினிமா வாய்ப்புகள் வந்தது. இப்போது கடல் தந்த காவியம் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறேன். வடக்கன்குளம் மேரி மாதாவின் அற்புதங்களை சொல்லும் பக்திப் படம். இந்த படத்தில் நான் ஹீரோயினாக அறிமுகமானது நான் செய்த பாக்கியம். என்கிறார் அஸ்ருதா.