தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒளிப்பதிவாளராக இருந்து மலையாளத்தில் நடிகர் ஆனவர் நரேன். சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். பள்ளிக்கூடம், நெஞ்சிருக்கும் வரை, அஞ்சாதே, தம்பிக்கோட்டை படங்களில் நடித்தார். முகமூடி படத்தில் வில்லனாக நடித்தார். சித்திரம் பேசுதடி, அஞ்சாதே தவிர எதுவுமே அவருக்கு சரியாக அமையவில்லை. இங்கு வாய்ப்பில்லாதபோது மலையாளப் படத்தில் நடிப்பார்.
சமீபகாலமாக தமிழில் அவருக்கு பெரிய வாய்ப்பில்லை கத்துக்குட்டி என்ற ஒரே ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதனால் இப்போது மலையாளத்தில் தீவிர கவனம் செலுத்துகிறார். தி ஹிட் லிஸ்ட், கமத் அண்ட் கமத், 3 டாட்ஸ், ஆறு சுந்தரியோட கதா, ரெட் பெய்ன் ஆகியவை அவர் சமீபத்தில் நடித்த படங்கள். தற்போது சிபிமலை இயக்கும் நிங்களுடே வீட்டில் அதிதிகள் என்ற படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார். ஜெயராம், பிரியாமணி கணவன் மனைவியாக நடிக்கும் இந்தப் படத்தில் நரேன் ஒரு மாடல் அழகராக நடிக்கிறார். அவர்கள் குடும்பத்தில் நுழைந்து குழப்பம் விளைவிக்கிற கதை. தொடர்ந்து நரேன் மலையாளப் படங்களில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார்.