Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆரம்பத்தில் என்னை யாரும் நம்பவில்லை... தனுஷ் சொல்கிறார்...!

29 ஜூலை, 2014 - 10:31 IST
எழுத்தின் அளவு:

இந்திய அளவில் தற்போது தனுஷுக்குக் கிடைத்துள்ள பெயரும் புகழும், யாரும் எதிர்பார்க்காததுதான். இன்னும் ஒரு சிலரால் அதை நம்பக் கூட முடியாது. இவரெல்லாம் எப்படி நடிகரானார், இந்த அளவுக்கு வெற்றியைப் பெறுகிறார் என்று அழகான சில இளம் ஹீரோக்கள் பொறாமைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிலருக்கு திரைப்படங்களில் நடிக்க கிடைக்கும் வாய்ப்பு தெரிந்தோ, தெரியாமலோ கிடைத்தாலும் அதன் பின் கிடைத்த வாய்ப்பில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு உச்சத்தில் பறக்க ஆரம்பித்தார்கள். கமல்ஹாசன், பாக்யராஜ் போன்றோரை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இவர்களும் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு ஒரு விபத்தாகத்தான் அமைந்தது. அதன் பின் இந்தியாவே போற்றும் கலைஞர்களாக விளங்கி வருகிறார்கள்.


தனுஷுக்கும் 'துள்ளுவதோ இளமை' படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பும் ஒரு விபத்துதான். அந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமான நான்கைந்து இளைஞர்களில் ஒருவர் திடீரென வராமல் போய்விட்டார். அப்போது அந்த படத்தின் இயக்குனரும், தனுஷின் அப்பாவுமான கஸ்தூரிராஜா +1 படித்துக் கொண்டிருந்த தனுஷை வராமல் போனவருக்குப் பதிலாக நடித்திருக்கிறார். அதன் பின் படிப்பையும் பாதியில் விட வேண்டிய சூழ்நிலைய தனுஷுக்கு ஏற்பட்டதாம். ஆனால், தொடர்ந்து அவரை படத்தில் நடிக்க வைக்க யாருமே முன் வரவில்லையாம். தன்னையெல்லாம் சில இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ஒரு நடிகனாகவே பார்க்கவில்லை என்கிறார் தனுஷ். தொடர்ந்து படிக்கவும் முடியாமல், நடிக்கவும் முடியாமல் தவித்த தனுஷை, அவருடைய அண்ணன் செல்வராகவன் 'காதல் கொண்டேன்' படத்தில் நாயகனாக்கினார். அந்த படத்தின் வெற்றி தனுஷை ஒரு நாயகனாக நிலை நிறுத்தியது.


இப்போது 'ஆடுகளம்' படத்திற்காக தேசிய விருது, 'ராஞ்சனா' படத்தின் மூலம் ஹிந்தியில் வரவேற்பு, அமிதாப்புடன் 'ஷமிதாப்' என ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்குப் பிறகு இந்திய அளவிலும் உயர்ந்து நிற்கிறார் தனுஷ். கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவனே புத்திசாலி, திறமைசாலி என்பதை தனுஷ் நிரூபித்திருக்கிறார்.


முன்னதாக நேற்று(ஜூலை 28ம் தேதி) தனது 31வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார். சமீபத்தில் இவரது வேலையில்லா பட்டதாரி படம் ஹிட்டாகி இருப்பதால் அதையும் சேர்த்து இந்த பிறந்தநாள் விழாவில் கொண்டாடினார். இதில், வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்த நடிகர்-நடிகைகளும் கலந்து கொண்டனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in