சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி |
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இந்த நிறுவனத்தின் மூலம் முதல் கட்டமாக தன்னுடைய கதை ஒன்றை இந்தியில் படமாக்க இருக்கிறார். அடுத்த கட்டமாக தமிழில் இரண்டு படங்களை தயாரிக்க இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: வாழ்க்கை தரும் அனுபவங்கள், பயணங்கள் காட்டும் மனிதர்கள். நமக்குள்ளே கதைகளை ஒருவாக்குகிறது. எனக்குள்ளும் நிறைய கதைகளை உருவாக்கி இருக்கிறது. அவற்றில் சிறந்த ஒன்றை தேர்வு செய்து படமாக எடுக்கிறேன். 20 வயதுள்ள புதுமுக ஹீரோ நடிக்கிறார். இயக்குனரும் தேர்வாகி விட்டார், எனது நிறுவனத்துடன் இணைந்து ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
இந்த பணிகள் முடிந்ததும் தமிழில் படம் தயாரிக்கிறேன். ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரிக்கும் திட்டம் உள்ளது. இதற்கான பணிகளும் தொடங்கி விட்டது. சினிமா இயக்கும் எண்ணம் இல்லை. அது பெரிய பொறுப்பு. எதை என்னால் சுமக்க முடியாது என்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.