ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சித்தார்த், லட்சுமிமேனன் நடித்துள்ள ஜிகிர்தண்டா படத்தை பீட்சா கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்திருந்தார். இந்தப் படம் கடந்த 25ந் தேதி வெளிவருதாக முதலில் அறிவித்தனர். பின்னர் படம் ஆகஸ்ட் முதல் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. தனுஷ் நடித்து வெளிவந்திருக்கும் வேலையில்லா பட்டதாரிக்கு வழிவிட்டு தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதற்கு சித்தார்த் தனது டுவிட்டரில் "பட ரிலீசை தள்ளி வைத்த விபரத்தை படத்தின் ஹீரோவான என்னிடம் தெரிவிக்கவில்லை" என்று கோபத்தை தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்த தயாரிப்பாளர் சங்கம் "ஒரு படத்தை வெளியிடுவதில் தயாரிப்பாளர்களுக்கு நிறைய பிரச்னைகளை இருக்கும். படத்தில் நடித்ததற்காக சம்பளத்தை பெற்றுக் கொண்ட நடிகர்களுக்கு ரிலீஸ் தேதியல் தலையிட உரிமை இல்லை" என்று கூறியிருந்தது.
இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவரான சரத்குமாரிடன் கேட்டபோது அவர் கூறியதாவது: ஒரு சினிமா வெளிவருவதில் அதில் நடித்த நடிகருக்கும் அக்கறை உண்டு. சித்தார்த் நல்ல நடிகர். தான் நடிக்கும் படத்தில் அக்கறை இருந்ததால்தான் தன் கருத்தை வெளியிட்டிருக்கிறார். பணம் வாங்கினோம் நடித்தோம் என்று நடிகர்கள் ஒதுங்கி போக முடியாது படத்தின் எல்லா விஷயத்திலும் அவர்களுக்கு அக்கறை உண்டு. ஜிகிர்தண்டா பட விவகாரத்தில் அந்தப் படம் வெளிவரவேண்டும் என்ற நோக்கத்தில்தான் நடிகர் சித்தார்த்த கருத்து கூறியுள்ளார். தயாரிப்பாளர்கள் இந்த பிரச்னையை பெரிது படுத்தியிருக்க வேண்டாம். என்று தெரிவித்திருக்கிறார்.