மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? |
பார்த்திபன் இயக்கி நடித்த பல படங்கள் தோல்வியடைந்தபோதும், நான் ஹீரோ என்கிற இமேஜில் இருந்து விடுபடமாட்டேன் என்று தொடர்ந்து விஷப்பரீட்சையில் ஈடுபட்டு வந்தார். ஆனால், வித்தகன் படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்தார். காரணம் அந்த டைட்டீலை அவர் சேம்பரில் பதிவு செய்து வைத்திருந்தபோதே விஜயகாந்த் நடிக்கும் ஒரு படத்திற்காக அதை கேட்டனர். ஆனால், என்னிடம் இருக்கும் கதைக்கு அந்த டைட்டீல்தான் பொருத்தமாக இருக்கும் என்று சொல்ல டைட்டீலை விஜயகாந்துக்கு கொடுக்க மறுத்து விட்டார் பார்த்திபன். அதனால் டைட்டீலுக்கு இருக்கிற ரெஸ்பான்சைப் பார்த்தவர், அப்படின்னா படமே பின்னி எடுத்திடும் போலிருக்கே என்றுதான் சொடக் போட்டுக்கொண்டிருந்தார்.
ஆனால், வித்தகன் அவருக்கு பெருத்த ஏமாற்றத்தைக்கொடுத்து விட்டது. அதனால்தான் அதன்பிறகு கதாநாயகன் கெட்டப்பை ஓரங்கட்டி வைத்து விட்டு, ஆயிரத்தில் ஒருவன், அம்புலி, ஜன்னல் ஓரம் உள்ளிட்ட படங்களில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நடித்த பார்த்திபன், இப்போது கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தில் திரைக்கு பின்னால் இருந்து இயக்குனராக மட்டுமே செயல்பட்டிருப்பவர், இதையடுத்து வெங்கட்பிரபு சூர்யாவை வைத்து இயக்கும் மாஸ் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
அது எந்த மாதிரியான வேடம் என்று விசாரித்தால், சூர்யா நாயகனாக நடிக்கும இப்படத்தில் ஒரு மெச்சூரிட்டியான கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார். பொதுவாக தனது படங்களில் எக்கச்சக்கமாக பேசி நடிக்கும் பார்த்திபனின் டயலாக்குகளுக்கு இந்த படத்தில் நிறைய சென்சார் போடுகிறாராம் வெங்கட்பிரபு. அந்த வகையில், பேச்சை குறைத்து நடிப்பை அதிகப்படுத்தும் வேடத்தில் பார்த்திபனை நடிக்க வைக்கப்போகிறாராம்.