பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ரசிகர்கள் கை தட்டி சபாஷ் சொன்னால் தான், எங்கள் வீட்டுக்கதவை வாய்ப்புகள் தட்டும், என தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தலைவரும் இசையமைப்பாளருமான தேவா கூறினார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி தமிழிசை சங்கம் சார்பில், 29ம் நாட்டியப்பெருவிழா, என்.ஜி.எம்., கல்லூரியில் நடந்தது. சங்கத்தின் துணைத்தலைவர் சிற்பி பாலசுப்பிரமணியம் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பத்ரி நாராயணன் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தலைவரும், திரைப்பட இசையமைப்பாளருமான தேவா பேசியதாவது: கலைஞர்கள் என்றும் பணத்திற்காக வேலை செய்வதில்லை; கலையை வளர்க்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்திலேயே பணியாற்றுகின்றனர். அவர்கள் தாங்கள் கற்கும் கலையை ரசித்து, காதலித்து வெளிப்படுத்துகின்றனர். அதனால்தான் அதில் ஒரு உயிரோட்டம் இருப்பது தெரியும்.பரதநாட்டியம் மற்ற நடனங்களிலிருந்து வேறுபட்டுள்ளது. பரதநாட்டியம் கற்பவர்கள் என்றுமே குருவை மறக்க மாட்டார்கள்; முதலில், குரு வணக்கம் செலுத்தி விட்டுத்தான் நடனமாடுவர்.
தமிழிசை சங்கம் சார்பில், நடைபெறும் நிகழ்ச்சிகளில் கூட்டம் குறைவாக இருந்தாலும், ரசிப்பவர்கள் கைதட்டி வரவேற்றாலே போதும். ரசிகர்கள் கை தட்டி சபாஷ் சொன்னால் தான், எங்கள் வீட்டுக்கதவை வாய்ப்புகள் தட்டும். அதனால், கலைக்கு ரசிகர்கள் முக்கியம்.இவ்வாறு, தேவா பேசினார்.
விழாவில், தமிழிசைச் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.