ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அன்னக்கொடி படத்திற்கு பிறகு இயக்குநர் இமயம் பாரதிராஜா, புதிய படம் ஒன்றை இயக்குகிறார். படத்திற்கு ‛நேற்றைக்கு மழை பெய்யும்' என தலைப்பு வைத்துள்ளார். இயக்குநர் சேரன், ஹீரோவாக நடிக்கிறார், இயக்குநர் அகத்தியன் எழுதிய கதையை தான் பாரதிராஜா படமாக இயக்குகிறார். தற்போது படத்திற்கான திரைக்கதை அமைக்கும் வேலைகளில் பாரதிராஜா மும்முரமாக இருக்கிறார், கூடவே ஹீரோயின் வேட்டையும் நடந்து வருகிறது. ஓவியா அல்லது ‛வழக்கு எண்' மனீஷா யாதவ் நடிக்கலாம் என தெரிகிறது. காதலை மையப்படுத்தி இப்படம் உருவாக இருக்கிறது. ஆகஸ்ட் 3ம் தேதி முதல் ஷூட்டிங் ஆரம்பமாக இருக்கிறது. விரைவில் படம் பற்றிய முழு அறிவிப்பையும் பாரதிராஜா வெளியிட உள்ளார்.