தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில் உள்ள மாதா கோவில் வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு இணையாக கருதப்படுகிறது. இந்த மாதாவின் மகிமையை உலகத்திற்கு காட்டும் படமாக கடல் தந்த காவியம் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் சுப்ரஜித், அம்ருதா என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். சரத் பிரியதேவ் இசை அமைத்துள்ளார், ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கடந்த தந்த காவியம் பற்றி அதன் இயக்குனரும் தயாரிப்பாளருமான பிரகாஷ் ஜியோ கூறியதாவது: வடக்கன் குளம் மரிய அன்னை சக்தி வாய்ந்தவர். இந்த பகுதி மக்களுக்கு பல ஆண்டகளாக அருள் பாலித்து வருகிறார். 1923ம் ஆண்டு வடக்கன்குளத்துக்கு கிறிஸ்தவ மதத்தை போதிக்க வந்தவர் சாந்தாயி அம்மாள். கடும் வறட்சியில் இருந்த ஊரில் குடிக்க தண்ணீர் இல்லாமல் தவித்தார். கடற்கறையை ஒட்டியுள்ள மணற்பரப்பில் அன்னை மேரியை வேண்டியபடி தோண்டினார். இனிக்கும் தண்ணீர் பொங்கி வந்தது. அந்த இடத்திலேயே அன்னைக்கு ஆலயம் கட்டி வழிபாடு செய்தார்.
அவர் தோண்டிய கேணியில் இப்போதும் இணிக்கும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வடக்கன்குளம் மாதா அந்த பகுதி மக்களுக்கு காட்டிய மகிமையை தொகுத்து இந்தப் படத்தை இயக்கி இருக்கிறேன். என்கிறார் பிரகாஷ் ஜியோ.